.

Pages

Wednesday, April 29, 2015

அதிரையில் பரபரப்பான விற்பனையில் கொத்துப் புரோட்டா !

அதிரையின் அனைத்து பகுதியிலும் விரல் விட்டு எண்ணிக்கொண்டே வந்தால், புரோட்டாக் கடைகளின் எண்ணிக்கை 50 ஐ தாண்டும். அந்தளவிற்கு இரவு வேலை உணவாக தினமும் பெரும்பாலான உள்ளூர் மக்கள் சாப்பிடுகின்றனர்.

அதிரை புரோட்டா என்றாலே நா ஊறும் அளவுக்கு தனி ருசி அதுவும் இரவு நேரக் கடைகளில் விற்பனையாகும் பொரிச்சப் புரோட்டாவிற்காக அலைமோதும் கூட்டங்கள் ஏராளம்.

இந்நிலையில் இன்று இரவு கடைத்தெரு பகுதியில் அமைந்துள்ள அனைத்து உணவகங்களிலும் கொத்து புரோட்டோ, முர்தபா விற்பனை களை கட்டியுள்ளது. ஒரு நபர் சாப்பிடும் அளவில் உள்ள ஒரு கொத்து புரோட்டோ  ₹ 50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பெரும்பாலான அதிரையர்கள் வீட்டிற்கு வாங்கிச் செல்கின்றனர்.

இந்த பகுதியின் கடைகளில் தயாரிக்கும் கொத்து புரோட்டோவில் ஏற்படும் நறுமணமும், இங்கு எழுப்பப்படும் ஓசையும், மின்னொளியும் அனைவரையும் சுண்டி இழுக்கின்றன. இதனால் கூட்டம் அதிகமாகவும், பரபரப்பாகவும் காணப்படுகிறது.
 
  

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    இன்றைக்கு ஹத்தத்து ராவாம், அதான் வெளுத்து வாங்குறாங்க.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.

    ReplyDelete
  2. கந்தூரி வந்தா மட்டும் தான் முட்டெ ரொட்டியா,


    ReplyDelete
  3. கந்தூரி வந்தா மட்டும் தான் முட்டெ ரொட்டியா,


    ReplyDelete
  4. Athekamana
    mear....pade. Aatkkal
    mutdai
    rotde
    vaagke pona
    thakaval erukkamea?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.