.

Pages

Tuesday, April 14, 2015

சி.எம்.பி லேன்-மிலாரிக்காடு-நடுவிக்காடு கிராம இணைப்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ ரெங்கராஜன் அவர்களோடு சமூக ஆர்வலர்கள் சந்திப்பு !

அதிரை பேரூராட்சியின் 21 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சி.எம்.பி லேன் பகுதியில் காணப்படும் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் வரும் அதிரை - மிலாரிக்காடு - நடுவிக்காடு கிராம இணைப்பு சாலை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்து வருகிறது. இந்த பகுதியில் வாழும் சமூக ஆர்வலர்கள் - பொதுமக்கள் பலர் பல்வேறு காலகட்டங்களில் சம்பந்தபட்டோரிடம் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்களை இன்று காலை அவர்களின் இல்லத்தில் நமதூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், மகபூப் அலி, அதிரை பேரூராட்சியின் 21 வது வார்டு உறுப்பினர் முஹம்மது இப்ராஹீம், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் முனைவர் ஓ. சாதிக், 'அதிரை நியூஸ்' நிர்வாகி கே. இத்ரீஸ் அஹமது, சேக் ஆகியோர் சந்தித்து மனுக்கள் அளித்தனர்.

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி அவர்கள் சார்பில் அளித்த மனுவில், பள்ளி மாணவர்கள் அமர இருக்கை வசதி செய்து தரக்கோரி கேட்டுக்கொண்டார். அதிரை பேரூராட்சியின் 21 வது வார்டு உறுப்பினர் முஹம்மது இப்ராஹீம் அளித்த மனுவில், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் வரும், மிகவும் பழுதடைந்து காணப்படும் அதிரை - மிலாரிக்காடு - நடுவிக்காடு கிராம இணைப்பு சாலையை மறுசீரமைக்க கேட்டுக்கொண்டார். அதே போல் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் முனைவர் ஓ.சாதிக் அவர்கள், ஏரிபுறக்கரை ஊராட்சி நிர்வாக எல்லை பிலால் நகரில் அமைந்துள்ள காதிர் முகைதீன் கல்லூரி பெண்கள் விடுதிக்கு மின்விளக்கு வசதி மற்றும் வடிகால் வாய்க்கால் அமைத்து தர வேண்டி மனு அளித்தார்.

மேலும் பள்ளி கல்லூரி அமைந்துள்ள ஈசிஆர் சாலையில் வாகன வேகத்தடுப்பு அமைக்க ஏற்பாடு செய்து தந்த திரு. என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்களுக்கு தலைமை ஆசிரியர் மகபூப் அலி நன்றி கூறினார்.

மனுக்களை பெற்றுக்கொண்ட திரு. என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்கள் சம்பந்தப்பட்ட துறையினரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.
 

4 comments:

  1. நமதூர் 21-வது வார்டு மெம்பரும், முக்கியஸ்தர்களும், காதிர் மொஹிதீன் கல்லூரி பேராசிரியர், காதிர் மொஹிதீன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் நமது பட்டுக்கோட்டை தொகுதி MLA ரெங்கராஜன் அவர்களை நேரில் சந்தித்து, குறிப்பிட்ட சாலைகள் அமைக்கும்படி வைத்த கோரிக்கை நிறைவேறினால், நமதூரைவிட சுற்றியுள்ள மிலாரிக்காடு, நடுவிக்காடு, போன்ற கிராமத்து மக்களும் ரொம்பவும் பயனடைவார்கள். இந்த சாலையை கடந்து 2 பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்களை சுமந்து செல்லும் வாகனங்களும் செல்கின்றன. இப்பகுதியில் புதிய வீடுகளும் கட்டப்படுவதால், சரியான சாலை அமைப்பு இல்லாமல் இருந்த சாலையும் குண்டும் குழியுமாகி ஒரு சைக்கிள்கூட, ஏன் பாத சாரிகல்கூட, நிம்மதியாக கடக்க முடியவில்லை.

    MLA அவர்களும் இந்த சாலை பற்றி பல தடவை வாக்குறுதி அளித்துள்ளதை நினைவில் கொண்டு விரைவில் முடித்து தர வேண்டுகிறோம்.

    ReplyDelete
  2. நல்ல காரியத்திற்காக நல்லவர்கள் சிலர் நல்லெண்ணத்துடன் நமதூர் MLA அவர்களை சந்தித்து CMP வாய்க்கள், மிலாரி காடு, நடுவிக்காடு இணைப்பு சாலை விஷயமாக மனு அளித்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். MLA அவர்கள் விரைவில் முடித்து தந்தால் நல்லது. அவர்களின் நமதூருக்கான முக்கிய வாக்குறிதிகளில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  3. நம்ம ஊர் நல்ல காரியத்திற்காக நல்லெண்ணத்துடன் செயல் பட்டு கொண்டு இருக்கும் மரைக்கா இத்ரிஸ் அவர்களுக்கு நமதூர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    ReplyDelete
  4. We should be thankful and appreciate Shri N.R. Rengarajan, M.L.A. for all the efforts and pain taken in fulfilling the requirements of the people of our home town Adirampattinam and around its villages.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.