.

Pages

Monday, April 20, 2015

கந்தூரி ஊர்வலத்தி்ல் அதிரை சாகுல் தலைமையில் கந்தூரி எதிர்ப்பாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் !

அதிரை காட்டுப்பள்ளி தர்ஹா கந்தூரி ஊர்வலம் இன்று மாலை தர்ஹாவிலிருந்து புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில், ஊர்வலம் பெரிய ஜும்மா பள்ளி அருகே வந்த போது அங்கு தயாராக நின்றுகொண்டிருந்த அதிரை சாகுல் தலைமையில் கந்தூரி எதிர்ப்பாளர்கள் திடீரென ஒன்றிணைந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக கந்தூரி இருப்பதாக கூறி கந்தூரி விழாவிற்கு எதிராக கோஷங்கள் இட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. உடனே அங்கு பாதுகாப்பு பணிக்கு நின்றிருந்த காவல்துறையினர் கந்தூரி ஊர்வலம் கடந்து செல்லும் வரை ஆர்ப்பாட்டக்காரர்களை சுற்றி சூழந்து கொண்டனர்.
 


9 comments:

  1. வருவாய் கோட்டாட்சியார் முன்னிலையில் கந்தூரி எதிர்ப்பாளராக மனு கொடுத்தவர்களே கால காலமா நடந்து வரும் இவ்விழாவினால் எந்தவித அசம்பாவிதம் நடந்தா? கத்தி குத்து நடப்பதெல்லாம் உங்கள் இயக்கத்தில் தானே! அமைப்பை தடை செய்ய வேண்டுமென்று யாராவது மனு கொடுத்தார்களா? கந்தூரி ஊர்வலம் இந்தப் பக்கம் வரக்க கூடாது அரசியல் கூட்டம் வரலாமென்று கூறுபவர்களே நீங்கள் நடத்தும் தெருமுனை பிரசாரத்தால் யார் யாருக்கு தொந்தரவுவென்று பட்டியலிட்டு கலக்டரிடம் மனு கொடுத்தார்களா? பிறை பார்த்தது முதல் பெருநாள் தொழுகை வரை குழப்பத்தை ஏற்படுத்துபவர்களே உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசுக்கு தெருவித்தார்களா? இல்லையே ! கந்தூரிக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினீர்கள் வேறெதற்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் அலுவலகத்தில் மனு கொடுத்தீர்கள்?

    கந்தூரி விழா மத நன்லினக்கத்தை வலிவுர்த்துவதாக தான் அமைகிறது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் பாருங்கள் இல்லையேல் தொந்தரு கொடுக்காமல் இருங்கள். வரும் தேர்தலில் ஒரு தொகுதியில் வெல்வது கடினம்...மக்கள் மீது தொடுக்கும் விரோத போக்கு தான் காரணம்.

    கந்தூரிக்கு செல்பவர்கள் நரகத்திற்கு போகிறார்களா இல்லையா என்பது இருக்கட்டும் தவ்ஹீத் தவ்ஹீத் என்று சொல்லிக் கொண்டு அதனால் ஏற்படும் மோதலால் சிறை செல்வது உறுதி!!!

    ReplyDelete
  2. Replies
    1. Mr.Jafarulla உங்கள் பெயருக்கு முன் உள்ள இனிசியலை அவசியம் போடுங்கள். இல்லையேல் எந்த Jafarulla என்று யாருக்கும் தெரியாது.
      நன்றி.

      Delete
  3. எண்னம்மா நீங்க இப்படி பன்றீங்க...........
    காமெடி

    ReplyDelete
  4. சமூக அக்கறையுள்ள அனைவரும் ஜனாப் மஸ்த்தான் கனியின் பின்னூட்ட அறிவுரைகளை ஏற்றுக்கொள்வார்கள். சமூக அக்கரையில்லா இந்த அதிரை அறைகூவல் அப்பப்போது முளைக்கும் அதிரையின் ஒரே வழிகாட்டி என்ற நினைப்பில் ஆலிலிம் போன்றவர்களுக்கு எங்கே கண்ணும் இதை படிக்கப்போகுது அல்லது காதும் கேட்கப்போகுது ? அவர்களுக்கு வேண்டுவது ஊரில் அமைதியின்மை குழப்பம் செய்வதுதான். இவர்களுக்காகத்தானே அரசு போலிஸ் இங்கு வந்துள்ளது. இவர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்யமுடியும் ? இந்த இஸ்லாமியர் என்ருக்கூரும் இவர்கள் -லக்கும் தீனுக்கும்- என்ற இறைவசனங்களை குர்ஆனில் ஏற்காதவர்கள் ! இவர்கள் குரான் வேறோ ?

    உங்கள் வழிகாட்டுதல் நல்லதென்றால் உங்கள் கொள்கை நல்லதென்றால் அடுத்த மனிதனை நிம்மதியாக வாழவிடும் மனிதனாக வாழ்ந்து காட்டுங்கள் ? அதைவிடுத்து அதிரைக்கும் அரசுக்கும் தொந்திரவு செய்யவதை இனிமேலாவது விட்டுவிடுங்கள்.

    ReplyDelete
  5. இதிலிருந்து என்ன தெரிவதென்றால் மஸ்தான்கனி கபுர் வணங்கி என்று திட்டவட்டமாக தெரிகிறது. நம் சமுதாயத்தை கெட்ட வழி செல்ல துடிக்கிறார்கள்

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Oru ottrumaiyea keduppathu entha Thowheed wathigal thaan Sunnathuval Jamathargal ellai athea therinchikonga mudalili.....

    Mr AMS Jafar avargaley...jafurullah avargal ensilyal sonna ungalukku avar yaru endru purichidumoo ??? enna comedy ethu

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.