இதுதொடர்பாக அதிரையில் வாழுகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தங்களின் எதிர்ப்பையோ அல்லது ஆதரவையோ கந்தூரி ஆதரவாளரிடமோ அல்லது எதிர்ப்பாளரிடமோ அல்லது பொதுமக்களிடமோ பகிரங்கமாக தெரியப்படுத்தியதில்லை.
கடந்த சில வருடங்களாக ஊரில் நடக்கும் கந்தூரி விழாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிரையில் இயங்கி வரும் தவ்ஹீத் அமைப்புகள் அவ்வப்போது துண்டு பிரசுரங்களும், தெருமுனை பிராசாரங்களும், பொதுக்கூட்டங்கள், கந்தூரி விழாவிற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டைகளும், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்குவதும், கந்தூரி விழாவின்போது விநியோகிக்கும் மின்சாரத்தை தடை ஏற்படுத்தாமல் இருக்க மின்சார வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லுவது உள்ளிட்ட தங்கள் தரப்பு எதிர்ப்புகளை பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று மாலை காட்டுப்பள்ளி தர்ஹாவின் கந்தூரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கடந்த முறை போல் இந்த முறையும் குறைவான உருப்படிகளுடன் ஊர்வலம் நகரை வலம்வந்தது. அதேபோல் பட்டாசுகள் எந்தவொரு இடத்திலும் வெடிக்கப்படவில்லை.
ஊர்வலம் துவங்குவதற்கு முன்னதாக ஊர்வலத்தில் இளைஞர்கள் டான்ஸ் ஆடினால் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விழா குழுவினர் சார்பில் ஒலிப்பெருக்கி அறிவிப்பு செய்யப்பட்டதால் இளைஞர்கள் ஊர்வலத்தில் அமைதியாக சென்றனர்.
முன்னதாக பட்டுக்கோட்டையில் கோட்டாசியர் அலுவலகத்தில் கடந்த [ 16-04-2015 ] அன்று ஏற்பாடு செய்யப்பட்ட இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தையில் கந்தூரி விழா கமிட்டியினர், தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் அதிரை கிளை நிர்வாகிகள், ADT அமைப்பின் நிர்வாகிகள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக அதிரை கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் மேலத்தெரு அல்பாக்கியத்தூஸ் சாலிஹாத் பள்ளிவாசல் வழியாகவும், நடுத்தெரு, புதுமனைதெரு, சி.எம்.பி லேன், ஆஸ்பத்திரி தெரு ஆகிய பகுதிகளுக்கு ஊர்வலம் செல்லாது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த பகுதிகளுக்கு ஊர்வலம் செல்லவில்லை.
அதேபோல் ஊர்வலத்தின் போது கடந்த முறைபோல், இந்த முறையும் நகரில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படாமல் இருந்தது. ஊர்வலத்தின் போது எவ்வித அசம்பாவிதமங்களும் நடைபெறாமல் இருக்க பட்டுக்கோட்டை கோட்ட போலீஸ் உதவி சூப்பிரண்டு தீபாகானேகர் மேற்பார்வையில், அதிரை நகர காவல்துறை ஆய்வாளர் திரு ஆனந்த தாண்டவம் தலைமையில் 60 க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆங்காங்கே முக்கிய பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். வாகனங்களில் ஊர்வலம் செல்லும் பாதைகளில் வலம் வந்து கொண்டிருந்தனர்.
Adirai sahul
ReplyDeleteantha amaippu
sollugka parppom
அது ஏன் குறிப்பிட்ட தெருவுக்குள் (ஏரியா) மட்டும் செல்ல தடை..????????????
ReplyDeleteதயவு செய்து காட்டுப்பள்ளி என்று எழுதவோ சொல்லவோ வேண்டாம் .. காட்டுதர்ஹா என்று சொல்லவும்
ReplyDeleteபள்ளி என்பது அல்லாஹுவின் இல்லம்
தர்ஹாவானது பொனத்தின் இல்லம்