.

Pages

Thursday, April 30, 2015

அதிரை சேர்மனின் துண்டு பிரசுர நன்றி அறிவிப்பு !

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டி இன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கோரிக்கை வெற்றி பெற காரணமாக இருந்த பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர், அதிரை அரசு மருத்துவமனை மருத்துவர், அதிரை காவல்துறையினர், அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் - உள்ளூர் இணையதளங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தனது நன்றியை துண்டு பிரசுரங்கள் மூலம் தெரியப்படுத்தி வருகிறார். இந்த துண்டு பிரசுரங்கள் நாளை அதிரையில் நடைபெற இருக்கும் அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் விநியோகிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ் எச் அஸ்லம் வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:

7 comments:

  1. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத மூத்த மருத்துவ நிபுணர் தெரிவித்த உண்மை ......அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பட்டுக்கோட்டை தாலுக்காவிலேயே சிறந்த மருத்துவமனையாக எல்லா சிறப்பு வசதிகளுடனும் செயல்பட்டு கொண்டிருக்கிறது ...தாலுக்கா தலைமையிடமான பட்டுகோட்டையிலையே 24 மணி நேர வசதி இல்லாத போது அதிரைக்கு எப்படி 24 மணி நேர மருத்துவ வசதி செய்ய முடியும் .முத்துபேட்டையில் இப்படிதான் சாலை மறியல். போராட்டம் என்று ஈடுபட்டதால் அங்கு இயங்கி வந்த G . H (ஜெனரல் ஹாஸ்பிடல்) P .H (பொது சுகாதார நிலையம்) ஆகிவிட்டது எந்த மருத்துவருமே பனி செய்ய விரும்பாததால் ...தற்போது அதிரை அரசு மருத்துவமனை மூன்று இளம் துடிப்பான சேவை மனப்பான்மை மிக்க மருத்துவர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது .... இங்கு முன்பு பனி செய்த பெண் மருத்துவரூக்கு தொடர்ந்து பிரசர் கொடுத்ததால் அந்த பெண் மருத்துவர் தற்போது பணிக்கு வருவதில்லை இவளவுக்கும் அவர்கள் கேட்ட ஒன்றே ஒன்று அதிரை அரசு மருத்துவனை அருகில் சேரும் குப்பைகளை அகற்ற சொன்னது தான் ....அதனால் அங்கு வரும் நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் பாதிப்பாக இருப்பதாக தெரிவித்ததாக சொன்னார் ......தொடர்ந்து நீங்கள் போராட்டம் சாலை மறியல் என்று ஈடுபட்டால் முத்துபேட்டை அரசு மருத்துவமனைக்கு ஏற்பட்ட நிலைமை தான் அதிரை அரசு மருத்துவமனைக்கும் ஏற்படும் ........மருத்துவர் பனி என்பது சேவை பனி அதை அதிரையில் பனி புரியும் மூன்று இளம் மருத்துவர்களும் செவ்வனே செய்து வருகிறர்கள் அதை அதிரை மக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்

    ReplyDelete
  2. அதிரை மக்கள் உண்மையாக நன்றி தெரிவிக்க விரும்பினால் அதை அதிரை நகர முன்னாள் நகர தந்தை மர்ஹூம் எம்.எம்.எஸ் ஷேக் தாவூது மரைக்கார் அவர்களுக்கு தெருவியுங்கள் அதிரைக்கு அரசு மருத்துவமனை வர முழு முயற்சி செய்து அதிரைக்கு அரசு மருத்துவமனையை கொண்டு வந்தவர்கள் .பின்னர் அவர்கள் சகோதரர் மர்ஹூம் ஜனாப் எம்.எம் .எஸ் அப்துல் வஹாப் ஹாஜியார் அவர்கள் புதிய மருத்துவ கட்டிடம் , கூடுதலான படுக்கை வசதி, மருத்துவ உபகரணங்கள் சிறப்பு வசதிகள் கிடைக்க முழு காரணமாக இருந்து அதை செயல் படுத்தி காட்டியவர்கள் ..மனசாட்சி உள்ள அதிரை மக்கள் அவர்களுக்காக துவா செய்யுங்கள் மனசாட்சி இல்லாதவர்கள் விமர்சன கணைகளை அள்ளி வீசுங்கள் .உண்மை அல்லாஹுவுக்கு தெரியும்

    ReplyDelete
  3. எம்.எம்.எஸ் குடும்பம் நமது ஊருக்கு 45 ஆண்டு காலம் தன்னலமற்ற சேவை செய்ததை எண்ணி அந்த நன்றிக்காக தான் ஊருக்கு உழைத்தது போதும் என்று அதிரை மக்கள் அவர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளனார்.
    -உமர்

    ReplyDelete
  4. சகோதரர் உமர் அவர்களே சரியாக தான் சொன்னீர்கள் எப்படி இந்திய மக்கள் 50 ஆண்டுகால காங்கிரசுக்கு ஒய்வு கொடுத்துவிட்டு மோடியை பதவியில் அமர்த்தினார்களோ ... அதே போல் தான் அதிரை மக்களும் எம்.எம்.எஸ் குடும்பத்திற்கு ஒய்வு கொடுத்துள்ளார்கள்

    ReplyDelete
  5. காங்கிரஸ் கட்சியும் எம்.எம்.எஸ் குடும்பம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்

    ReplyDelete
  6. இந்த துண்டு சீட்டில் ததஜ மற்றும் அதிரை நியூஸ் என அதே போல் பல இயக்கங்கள் மற்றும் செய்தி வலைதளங்கள் இருந்தும் தனித்து சிலவற்றையை மட்டும் பதிய காரணம்



    எதாவது சிறப்பு உண்டா???

    ReplyDelete
  7. இந்த துண்டு சீட்டில் ததஜ மற்றும் அதிரை நியூஸ் என அதே போல் பல இயக்கங்கள் மற்றும் செய்தி வலைதளங்கள் இருந்தும் தனித்து சிலவற்றையை மட்டும் பதிய காரணம்



    எதாவது சிறப்பு உண்டா???

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.