இந்நிலையில் நேற்று இரவு பட்டுக்கோட்டையிலிருந்து ஆட்டோ வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். இவருடன் தமுமுக நகர பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி, துணைச் செயலாளர் தமீம் அன்சாரி மற்றும் நடுத்தெருவை சேர்ந்த ராஜிக் ( வயது 32 ) ஆகியோர் இருந்தனர். வாகனம் கரிக்காடு அருகே வந்தபோது 15 பேர்கள் கொண்ட கும்பல் ஆட்டோ வாகனத்தை வழிமறித்து கடுமையாக தாக்கினர். இதில் வாகனத்தில் இருந்த ராஜிக்கை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். கும்பல் தாக்கியதில் அஹமது ஹாஜாவுக்கு பலத்த காயமும், மற்றவர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த தமுமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமுமுகவினர் திரளாக மருத்துவமனையில் குவிந்துள்ளனர். தப்பியோடிய நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், கடத்தி சென்ற ராஜிக்கை மீட்டு தரக்கோரியும் இன்று மாலை பட்டுக்கோட்டை காவல் நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயத்தையும் புகைப்படம் எடுத்து போட்டுங்களேன் மக்கள்் பாா்க்கட்டும்
ReplyDeleteகாயத்தையும் புகைப்படம் எடுத்து போட்டுங்களேன் மக்கள்் பாா்க்கட்டும்
ReplyDeleteஅஹமது ஹாஜா மச்சான் தாக்கபட்ட செய்தி துரதிஷ்டமானது. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவும்
ReplyDeleteஅஹமது ஹாஜா மச்சான் தாக்கபட்ட செய்தி துரதிஷ்டமானது. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவும்
ReplyDelete