.

Pages

Wednesday, April 1, 2015

காதிர் முகைதீன் கல்லூரி விடுதி தின விழாவில் மாணவிகள் கெளரவிப்பு !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மகளிர் விடுதி தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன், விடுதி வார்டன் முனைவர் ஓ. சாதிக், துணை வார்டன் முனைவர் சாபீரா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

முன்னதாக விடுதி மாணவி சர்மிளி கிராத் ஓதினார், தமிழ்த்தாய் வாழ்த்தை சபீதா, தரண்யா, ராபியா ஆகியோர் பாடினர். விடுதி மாணவி பானுப்பிரியா வரவேற்புரை ஆற்றினார்.

விழாவில் விடுதியின் சார்பில் நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விடுதி மாணவிகளின் சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் விடுதியின் நிறை - குறைகளை கேட்டறிந்தார். விழா முடிவில் விடுதி மாணவி ராபியா நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப், விடுதி மேலாளர், விடுதி காப்பாளர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    காதிர் முகைதீன் கல்லூரி மகளிர் விடுதி தின விழாவில் மாணவிகள் கெளரவிப்பு! வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், இனி வரும் நாட்களில் வெற்றி பெரும் மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    படிக்கும் நாட்களில் விடுதி வாழ்க்கை என்பது தனித்துவம் வாய்ந்தது, இதில் பொறுமையோடும் நேர்மையோடும் விழிப்புணர்வோடும் இருந்து நாட்களை நகர்த்தி, எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து இந்த படியிலிருந்து மறு படிக்கும் ஏறப்போகும் உங்களை எவராலும் அசைக்க முடியாது. அந்த அளவுக்கு மன உறுதியோடு நிலைபெறும் உங்களை மீண்டும் வாழ்த்துகிறேன்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.

    ReplyDelete
    Replies
    1. மேலே மூன்றாவது வரியில் "பெரும்" என்று இருப்பதை "பெறும்" என்று திருத்தி வாசிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
  2. மாணவிகள் தன் வாழ்வில் முன்னேற ஏற்படும் தடைகளையும், சவால்களையும் தூண்டுகோளாக கொள்ள வேண்டும். ஒருவர் ஏழையாய் பிறப்பது தவறல்ல, ஏழையாய் இறப்பது அவரது தவறு. அனைவரும் வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.