.

Pages

Tuesday, April 14, 2015

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் ! [ படங்கள் இணைப்பு ]

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹுவின் கிருபையால் அதிரை பைத்துல்மால்  ரியாத் கிளையின் 22 வது மாதாந்திர கூட்டம் கடந்த 10/04/2015 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராத்                     : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )
முன்னிலை             : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை          : சகோ. M.அப்துல் மாலிக் ( இணை செயலாளர்
சிறப்புரை              : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )
அறிக்கை வாசித்தல்  : A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )

தீர்மானங்கள்:
1) கடந்த வருடம்  2014-ம் ஆண்டு ஹஜ் பெருநாள் அன்று  குர்பானி கொடுத்த வீடியோ காட்சிகளும் அதற்கான சிறப்புரையும்  காண்பிக்கப்பட்டு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

2) இன்ஷாஅல்லாஹ் வரும் ரமலான் மாதம் பிறை 9, 26-06-2015 அன்று வெள்ளிக்கிழமை மாலை  நடைபெற இருக்கும் மெகா கூட்டத்திற்கு(இஃப்தார் நிகழ்ச்சி) ரியாத்தில் வசிக்கும்   அதிரை வாசிகள்  அனைவரையும் அழைப்பது சம்பந்தமாக உறுப்பினர்கள் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

 3) தவிர்க்க  முடியாத சில காரணங்களால் மாதாந்திர கூட்டத்திற்கு கலந்து கொள்ளாத உறுப்பினர்களிடம் மாத சந்தா வசூலிப்பது சம்பந்தமாக பரிந்துரை செய்யப்பட்டு கீழ்காணும் பொறுப்புதாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்காக  ஒத்துழைப்பு தருமாறு அன்போடு கேட்டு கொள்ளப்பட்டது.

பொறுப்புதாரிகள்:
BATHA AREA – ஜமால் முகமது
OLAYA AREA – அஷ்ரஃப்
MALAZ AREA – அப்துல் ராஷீது
HARA AREA - அகமது ஹாஜா

4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 8-ம் தேதி MAY 2015  ஹாராவில் 4.30 TO 5.30 PM வரை  நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

நன்றியுரை  : அகமது ஹாஜா ( இணை பொருளாளர் )
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.