.

Pages

Wednesday, August 31, 2016

10.5 லிட்டர் இரத்த தானம் செய்து அதிராம்பட்டினம் இளைஞர் சாதனை !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் ஏ. சாகுல் ஹமீது. சமூக ஆர்வலரான இவர் 'மணிச்சுடர்' இதழின் அதிராம்பட்டினம் பகுதி நிருபராகவும், 'அதிரை நியூஸ்' இணையதளத்தின் நேர்காணல் நடத்துனராகவும் இருந்து வருகிறார்.

கடந்த 9 ஆண்டுகளாக ஆர்வத்துடன் தானாக முன்வந்து இரத்த தானம் செய்து வருகிறார். இதுவரையில் 29 தடவை இரத்தம் வழங்கி மொத்தம் 10 லிட்டர் 150 மில்லி கிராம் இரத்தம் வழங்கி உள்ளார். இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை 30 வது முறையாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இரத்தம் வழங்கினார். இதுவரையில் 10.50 லிட்டர் இரத்தம் வழங்கி சாதனை புரிந்துள்ளார்.

இவருக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை இளநிலை நிர்வாக அலுவலர் பாலச்சந்தர் வாழ்த்து தெரிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அருகில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கி பொறுப்பாளர் கலைச்செல்வன், இரத்த கொடையாளர் ஜாகிர் ஹுசைன் ஆகியோர் உள்ளனர்.

இவரது இரத்த தான சேவையைப் பாராட்டி கடந்த ஜூன் மாதம் அதிரை சமூக நல அறக்கட்டளை சார்பில் 'சேவை விருது' வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தஞ்சையில் கடந்த ஆண்டு நடைபெற்ற இரத்ததான ஒருங்கிணைப்பாளர் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இவருடைய குருதிக்கொடை சேவையை பாராட்டி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. பாஸ்கரன் அவர்கள், தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான விழாவில் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ. அஹமது எம்பி, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்பி, பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. என்.ஆர். ரெங்கராஜன் எம்எல்ஏ ஆகியோரிடம் பாராட்டுதலை பெற்றுள்ளார். மேலும் அதிரை லயன்ஸ் சங்கம் வழங்கிய குருதிக்கொடையாளர் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.