தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க அரசு உத்தேசித்துள்ளது.
இதுகுறித்து, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஆர். குருமூர்த்தி பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் அனுப்பியுள்ள அறிக்கை விவரம்:
பட்டுக்கோட்டை வட்டத்தில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 4,90,965 பேர். பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத் தலைமை இடமாகவும், சட்டப்பேரவைத் தொகுதியாகவும் உள்ளது. பட்டுக்கோட்டை வட்டத்தில் தற்போது பட்டுக்கோட்டை நகராட்சி, பட்டுக்கோட்டை (முழுமை), மதுக்கூர் (முழுமை), சேதுபாவாசத்திரம் (பகுதி), திருவோணம் (பகுதி), பேராவூரணி (பகுதி) என 5 ஊராட்சி ஒன்றியங்கள், மதுக்கூர், அதிராம்பட்டினம் ஆகிய 2 பேரூராட்சிகள், மதுக்கூர், பெரியக்கோட்டை, தம்பிக்கோட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, நம்பிவயல், திருச்சிற்றம்பலம், குறிச்சி, ஆண்டிக்காடு ஆகிய 10 பிர்க்காக்கள், 175 வருவாய் கிராமங்கள், 103 ஊராட்சிகள் உள்ளன. நிர்வாக வசதிக்காக, பட்டுக்கோட்டை வட்டத்தை பட்டுக்கோட்டை மேற்கு, பட்டுக்கோட்டை கிழக்கு என இரண்டு வட்டங்களாகப் பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2 வட்டங்களுக்கும் பட்டுக்கோட்டையே தலைமை இடமாக இருக்கும்.
இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, 2 புதிய வட்டங்கள் குறித்த விவரம்:
பட்டுக்கோட்டை மேற்கு:
இவ்வட்டத்தின் மக்கள்தொகை 2,87,054. பட்டுக்கோட்டை நகராட்சி, பட்டுக்கோட்டை (பகுதி), சேதுபாவாசத்திரம் (பகுதி), பேராவூரணி (பகுதி), திருவோணம் (பகுதி) ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள், பட்டுக்கோட்டை, நம்பிவயல், திருச்சிற்றம்பலம், குறிச்சி, ஆண்டிக்காடு ஆகிய 5 பிர்க்காக்கள், 100 வருவாய் கிராமங்கள், 54 ஊராட்சிகள் இவ்வட்டத்தில் இடம்பெறும்.
பட்டுக்கோட்டை கிழக்கு:
இவ்வட்டத்தின் மக்கள்தொகை 2,03,911. மதுக்கூர் (முழுமை), பட்டுக்கோட்டை (பகுதி) ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள், மதுக்கூர், அதிராம்பட்டினம் ஆகிய 2 பேரூராட்சிகள், மதுக்கூர், பெரியகோட்டை, தம்பிக்கோட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் ஆகிய 5 பிர்க்காக்கள், 75 வருவாய் கிராமங்கள், 49 ஊராட்சிகள் இவ்வட்டத்தில் இடம்பெறும்.
இதுகுறித்து, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஆர். குருமூர்த்தி பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் அனுப்பியுள்ள அறிக்கை விவரம்:
பட்டுக்கோட்டை வட்டத்தில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 4,90,965 பேர். பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத் தலைமை இடமாகவும், சட்டப்பேரவைத் தொகுதியாகவும் உள்ளது. பட்டுக்கோட்டை வட்டத்தில் தற்போது பட்டுக்கோட்டை நகராட்சி, பட்டுக்கோட்டை (முழுமை), மதுக்கூர் (முழுமை), சேதுபாவாசத்திரம் (பகுதி), திருவோணம் (பகுதி), பேராவூரணி (பகுதி) என 5 ஊராட்சி ஒன்றியங்கள், மதுக்கூர், அதிராம்பட்டினம் ஆகிய 2 பேரூராட்சிகள், மதுக்கூர், பெரியக்கோட்டை, தம்பிக்கோட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, நம்பிவயல், திருச்சிற்றம்பலம், குறிச்சி, ஆண்டிக்காடு ஆகிய 10 பிர்க்காக்கள், 175 வருவாய் கிராமங்கள், 103 ஊராட்சிகள் உள்ளன. நிர்வாக வசதிக்காக, பட்டுக்கோட்டை வட்டத்தை பட்டுக்கோட்டை மேற்கு, பட்டுக்கோட்டை கிழக்கு என இரண்டு வட்டங்களாகப் பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2 வட்டங்களுக்கும் பட்டுக்கோட்டையே தலைமை இடமாக இருக்கும்.
இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, 2 புதிய வட்டங்கள் குறித்த விவரம்:
பட்டுக்கோட்டை மேற்கு:
இவ்வட்டத்தின் மக்கள்தொகை 2,87,054. பட்டுக்கோட்டை நகராட்சி, பட்டுக்கோட்டை (பகுதி), சேதுபாவாசத்திரம் (பகுதி), பேராவூரணி (பகுதி), திருவோணம் (பகுதி) ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள், பட்டுக்கோட்டை, நம்பிவயல், திருச்சிற்றம்பலம், குறிச்சி, ஆண்டிக்காடு ஆகிய 5 பிர்க்காக்கள், 100 வருவாய் கிராமங்கள், 54 ஊராட்சிகள் இவ்வட்டத்தில் இடம்பெறும்.
பட்டுக்கோட்டை கிழக்கு:
இவ்வட்டத்தின் மக்கள்தொகை 2,03,911. மதுக்கூர் (முழுமை), பட்டுக்கோட்டை (பகுதி) ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள், மதுக்கூர், அதிராம்பட்டினம் ஆகிய 2 பேரூராட்சிகள், மதுக்கூர், பெரியகோட்டை, தம்பிக்கோட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் ஆகிய 5 பிர்க்காக்கள், 75 வருவாய் கிராமங்கள், 49 ஊராட்சிகள் இவ்வட்டத்தில் இடம்பெறும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.