அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 31
துபாயின் ரெஸிடென்ஷியல் ஏரியாக்கள் மற்றும் வில்லாக்களில் நடைபெறும் வாடகை வீடுகள் தொடர்பான விதிமீறல் குற்றங்களை கண்டுபிடிக்க மாலை நேரங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படுமென துபாய் மாநகராட்சி அறிவித்துள்ளது.
துபாயில் ரெஸிடென்ஷியல் ஏரியாக்கள் எனப்படும் குடும்பத்தினர் மட்டும் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மற்றும் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ள வில்லாக்களை பகிர்ந்து (Sharing Basis) கொண்டு வாழும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை பிடித்து சட்டப்படி தண்டிக்க மாலை நேர சிறப்பு சோதனை குழுக்களை துபாய் மாநகராட்சி அமைத்துள்ளது.
பொதுவாக, பகலில் தங்குமிடங்களை பூட்டிவிட்டு பெரும்பான்மையோர் வேலைக்குச் சென்றுவிடுவதால் விதிமீறல்களில் ஈடுபடுவோரை சோதனை செய்ய முடியாமல் போவதாலேயே மேலதிகமாக இந்த மாலை நேரக் சோதனைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.
இந்த சிறப்பு சோதனைக் குழுக்கள் மாலை நேரங்கள் மட்டுமின்றி வார விடுமுறை தினங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபாய், ஆகஸ்ட் 31
துபாயின் ரெஸிடென்ஷியல் ஏரியாக்கள் மற்றும் வில்லாக்களில் நடைபெறும் வாடகை வீடுகள் தொடர்பான விதிமீறல் குற்றங்களை கண்டுபிடிக்க மாலை நேரங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படுமென துபாய் மாநகராட்சி அறிவித்துள்ளது.
துபாயில் ரெஸிடென்ஷியல் ஏரியாக்கள் எனப்படும் குடும்பத்தினர் மட்டும் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மற்றும் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ள வில்லாக்களை பகிர்ந்து (Sharing Basis) கொண்டு வாழும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை பிடித்து சட்டப்படி தண்டிக்க மாலை நேர சிறப்பு சோதனை குழுக்களை துபாய் மாநகராட்சி அமைத்துள்ளது.
பொதுவாக, பகலில் தங்குமிடங்களை பூட்டிவிட்டு பெரும்பான்மையோர் வேலைக்குச் சென்றுவிடுவதால் விதிமீறல்களில் ஈடுபடுவோரை சோதனை செய்ய முடியாமல் போவதாலேயே மேலதிகமாக இந்த மாலை நேரக் சோதனைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.
இந்த சிறப்பு சோதனைக் குழுக்கள் மாலை நேரங்கள் மட்டுமின்றி வார விடுமுறை தினங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.