.

Pages

Tuesday, August 30, 2016

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடந்துவரும் அகல ரயில் பாதை விரிவாக்கப் பணிகள்; ரயில்வே உயர் அதிகாரி ஆய்வு ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வரும் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகளை தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை துணை பொறியாளர் சாம்சங் விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடர்பாக தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை துணை பொறியாளர் சாம்சங் விஜயகுமார் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகளை இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கட்டுமானப் பிரிவு உதவி  நிர்வாக பொறியாளர்கள் பி. செல்வம், கணபதி, உதவி பொறியாளர் எட்வின் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் விவேகானந்தம், லாசர், அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர்கள் ஹனீபா, கே.எம்.ஏ ஜமால் முஹம்மது, சேக்கனா நிஜாம், மணிச்சுடர் சாகுல் ஹமீது, முஹம்மது தமீம், செல்வம், அபூபக்கர், அன்வர், அன்சாரி உள்ளிட்டோர் அதிகாரிகளை சந்தித்து பணிகளை விரைந்து முடித்து தர கோரிக்கை விடுத்தனர். பின்னர்
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கிராவல் மற்றும் மணல் கலவை நிரப்பும் பணியை பார்வையிட்டனர்.

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப்பணியில், பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை வரை உள்ள 63 சிறுபாலங்களில் 40 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 5 பெரிய பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2017 மார்ச் 17-க்குள் காரைக்குடி, பட்டுக்கோட்டை பணிகள் முடிவடையும். பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரையிலான பணிகள் 2018 மார்ச்சில் முடிவடையும் என கூறப்படுகிறது.



 

1 comment:

  1. நம்ம ஊர் சட்டமன்ற உறுப்பினர் நாடாளு மன்ற உறுப்பினர்கள் எல்லாம் இப்போ இங்கே வரமாட்டர்களா? தேர்தல் சமயத்தில்தான் தலைகாட்டுவார்களா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.