அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 29
சவூதியின் தொழிலாளர் மற்றும் சமூக நல மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளபடி, சவூதியில் பிச்சை எடுப்போரை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களுக்கு பிச்சை வழங்காமல் அவர்களை அவர்களுக்கென சவூதி முழுவதும் செயல்படும் சிறப்பு நல மையங்களுக்கு அனுப்பும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவ்வாறு சிறப்பு நல மையங்களுக்கு அனுப்பப்படும் பிச்சைகாரர்கள் சுமார் 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு தர்ம ஸ்தாபனங்கள் மூலம் தேவையான வாழ்வியல் உதவிகளை பெறுவதுடன் சமூகத்தில் பிச்சை எடுக்காமல் கௌரவமாக வாழவும் பயிற்சியளிக்கப்படுவர்.
இந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்ற 'குடும்பம், சமூகம் மற்றும் இளைஞர் நலனுக்காக' நடைபெற்ற சூரா கவுன்சிலின் கூட்டத்தில், குழந்தைகளையும் மாற்றுத் திறனாளிகளையும் வைத்து பிச்சை எடுப்போருக்கு 2 வருட தண்டனையுடன் 30,000 ரியால்கள் அபராதம் விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சவூதியை சேர்ந்தவர்கள் யாராவது பிச்சை எடுத்தால் அவர்கள் முதன்முறை எனில் 6 மாதம் தடுத்து வைக்கப்படுவர் அல்லது 10,000 ரியால் அபராதம் செலுத்த நேரிடும். இரண்டாம் முறையும் ஈடுபட்டால் 1 வருட சிறையுடன் 20,000 ரியால் அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.
மூன்றாம் முறையும் பிச்சை எடுத்து பிடிபட்டால் 30,000 ரியால் மற்றும் 2 வருட சிறை. நான்காம் முறையும் பிடிபட்டால் மேற்படி தண்டனை அப்படியே இரட்டிப்பாகும் மேலும் அவர் பிச்சை எடுத்து சேர்த்துள்ள பணம் முழுமையாக பறிமுதல் செய்யப்பட்டு தர்ம ஸ்தாபனங்களுக்கு வழங்கப்படும்.
கடந்த ஜூன் மாதத்தில் ரியாத் மாநகரிலும், கிழக்கு மாகாணத்திலும் 150 பிச்சைக்காரர்கள் பிடிபட்டுள்ளனர். புனித ரமலான் மாதத்தின் ஆரம்ப 4 நாட்களில் ரியாத் நகரில் பிடிபட்ட 90 பிச்சைக்காரர்களில் 34 குழந்தைகளும் அடங்குவர். இவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள். கிழக்கு மாகாணத்தில் பிடிபட்ட 60 பேரில் 3 சவூதி நாட்டவர்களும் அடக்கம்.
முஸ்லீம்களின் ஈகை குணத்தால் இதுபோன்ற பிச்சைக்காரர்களின் நடமாட்டம் புனித ரமலான் மாதத்தில் அதிகரித்து காணப்படுகின்றன. மேலும் இவர்களை தடுக்கும் நோக்குடன் டிராபிக் சிக்னல்கள், மஸ்ஜிதுகள், பூங்காக்கள், கடைவீதிகள் மற்றும் ATM சென்டர்கள் அருகிலும் திடீர் சோதனைகள் அதிகரிக்கப்பட உள்ளன.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 29
சவூதியின் தொழிலாளர் மற்றும் சமூக நல மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளபடி, சவூதியில் பிச்சை எடுப்போரை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களுக்கு பிச்சை வழங்காமல் அவர்களை அவர்களுக்கென சவூதி முழுவதும் செயல்படும் சிறப்பு நல மையங்களுக்கு அனுப்பும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவ்வாறு சிறப்பு நல மையங்களுக்கு அனுப்பப்படும் பிச்சைகாரர்கள் சுமார் 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு தர்ம ஸ்தாபனங்கள் மூலம் தேவையான வாழ்வியல் உதவிகளை பெறுவதுடன் சமூகத்தில் பிச்சை எடுக்காமல் கௌரவமாக வாழவும் பயிற்சியளிக்கப்படுவர்.
இந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்ற 'குடும்பம், சமூகம் மற்றும் இளைஞர் நலனுக்காக' நடைபெற்ற சூரா கவுன்சிலின் கூட்டத்தில், குழந்தைகளையும் மாற்றுத் திறனாளிகளையும் வைத்து பிச்சை எடுப்போருக்கு 2 வருட தண்டனையுடன் 30,000 ரியால்கள் அபராதம் விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சவூதியை சேர்ந்தவர்கள் யாராவது பிச்சை எடுத்தால் அவர்கள் முதன்முறை எனில் 6 மாதம் தடுத்து வைக்கப்படுவர் அல்லது 10,000 ரியால் அபராதம் செலுத்த நேரிடும். இரண்டாம் முறையும் ஈடுபட்டால் 1 வருட சிறையுடன் 20,000 ரியால் அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.
மூன்றாம் முறையும் பிச்சை எடுத்து பிடிபட்டால் 30,000 ரியால் மற்றும் 2 வருட சிறை. நான்காம் முறையும் பிடிபட்டால் மேற்படி தண்டனை அப்படியே இரட்டிப்பாகும் மேலும் அவர் பிச்சை எடுத்து சேர்த்துள்ள பணம் முழுமையாக பறிமுதல் செய்யப்பட்டு தர்ம ஸ்தாபனங்களுக்கு வழங்கப்படும்.
கடந்த ஜூன் மாதத்தில் ரியாத் மாநகரிலும், கிழக்கு மாகாணத்திலும் 150 பிச்சைக்காரர்கள் பிடிபட்டுள்ளனர். புனித ரமலான் மாதத்தின் ஆரம்ப 4 நாட்களில் ரியாத் நகரில் பிடிபட்ட 90 பிச்சைக்காரர்களில் 34 குழந்தைகளும் அடங்குவர். இவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள். கிழக்கு மாகாணத்தில் பிடிபட்ட 60 பேரில் 3 சவூதி நாட்டவர்களும் அடக்கம்.
முஸ்லீம்களின் ஈகை குணத்தால் இதுபோன்ற பிச்சைக்காரர்களின் நடமாட்டம் புனித ரமலான் மாதத்தில் அதிகரித்து காணப்படுகின்றன. மேலும் இவர்களை தடுக்கும் நோக்குடன் டிராபிக் சிக்னல்கள், மஸ்ஜிதுகள், பூங்காக்கள், கடைவீதிகள் மற்றும் ATM சென்டர்கள் அருகிலும் திடீர் சோதனைகள் அதிகரிக்கப்பட உள்ளன.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.