.

Pages

Tuesday, August 30, 2016

துபாயில் தென் அமெரிக்க இயற்கை சூழலில் உள்ளரங்க மழைக்காடு ! ( படங்கள் )

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 30
எந்த இயற்கை சூழலையும் செயற்கையாய் பாலைவனத்துக்குள் பதியம் செய்துப்பார்க்க துபை தயங்கியதே இல்லை. பல்லாண்டுகளுக்கு முன்பே மால் ஆப் தி எமிரேட்ஸ் உள்ளே வந்த பனிமலை (Ski Dubai) ஆகட்டும், பிரம்மாண்ட மீன் தொட்டியாகட்டும் (Aquarium), எண்ணற்ற பூங்காக்கள் ஆகட்டும், விரைவில் திறக்கப்படவுள்ள உயிரியல் பூங்காவாகட்டும் (Dubai Safari) என தொட்ட எதிலும் தனி முத்திரை பதிக்கத் தவறியதே இல்லை.

2018 ஆம் ஆண்டில் ஓர் பிரமாண்ட கட்டிட உச்சியில் மழவேனிற்காடு உருவாக்கும் திட்டம் ஒன்று கருக்கொண்டுள்ள நிலையில் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 4 அடுக்கு சூழல் மண்டபத்தில் (Eco Dome) தென்னமெரிக்க மழவேனிற்காடு ஒன்று அதே இயற்கை சூழலில் வாழும் சுமார் 3000 செடி, கொடி, மரங்கள் மற்றும் வன உயிரினங்களுடன் "பிறப்பு விழா" காணவுள்ளது.

துபாயில், வெயில் விடைபெற்று சாதாரண காலநிலையும் குளிரும் நிலவும் அடுத்த 7 மாதங்களுக்கு மடைத்திறந்த வெள்ளம்போல் வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து ஈர்க்கும் நடவடிக்கைகள் துவங்கும், அதிலொன்று துபை வர்த்தக திருவிழா என்பதும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வழமைபோல் எதிர்வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புதிய தீம் பார்க்குகள் உள்ளிட்ட பல பொழுதுபோக்கு தொடர்புடைய புதிய அம்சங்கள் திறப்பு விழா காணவுள்ளன.

அதனடிப்படையில், ஜூமைரா வட்டத்தில் அல் சபா சாலையில் அமைந்துள்ள சிட்டி வாக் 2 பகுதியில் 'தி கிரீன் பிளேனட் துபாய்' (the Green planet Dubai) எனும் இயற்கை சூழலியல் உள்ளரங்க மழவேனிற்காடு (Indoor Eco Tropical Rain Forest) 4 அடுக்குமாடி உயரத்தில் கல்விசார் நோக்குடன் உருவாகியுள்ளது.

பள்ளிச்சிறார்களுக்கான பல்வேறு கல்வித்திட்டங்களுடன் உருவாகியுள்ள இக்காட்டின் மத்தியில் 'செயற்கை பிரமாண்ட மரம்" (manmade tree)  ஒன்று நான்கு அடுக்கு மாடிகளுக்கும் கிளை பரப்பி நிற்கிறது, இந்த மரத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுழல் படிக்கட்டுகள் (Spiral Walkway) வழியாக அல்லது லிப்ட் வழியாக எறி, இறங்கி இதன் அழகை ரசிக்கலாம்.

தினமும் காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் காடு வியாழன், வெள்ளிகளில் மட்டும் நள்ளிரவு 12 மணிவரை திறந்திருக்கும். பெரியவர்களுக்கான கட்டணம் 95 திர்ஹம் என்றும் 2 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 70 திர்ஹம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தரையிலிருந்து சுமார் 45 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மேல்மாடியில் பல வகை வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட பறவையினங்களும், 3 வது மாடியில் பல வகை வண்ண மலர்களுடன் ஒங்கி வளர்ந்த செடி, கொடி, மரங்களும், இரண்டாவது மாடியில் சிறு வன உயிரினங்களும், தரை தளத்தில் வருடத்திற்கு 3 மி.மீ. மழைபெய்யும் செயற்கை வசதியுடன் தரை மற்றும் நீர்வாழ் உயினங்களுக்கேற்ற குகைகள், நிர்வீழ்ச்சி, ஓடைகள், மீன் வளர்ப்பு தடாகங்கள் என கண்களுக்கு விருந்தளிக்கவுள்ளது.

Source: Gulf News & The Green Planet
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.