.

Pages

Monday, August 29, 2016

சிஎம்பி லேன் பகுதியில் ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: கவுன்சிலர் இப்ராகிம் நேரில் ஆய்வு !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 21
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்ட சிஎம்பி லேன் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டு கவுன்சிலர் முகம்மது இப்ராகிம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டு சிஎம்பி லேன் ஹனீப் பள்ளிவாசல் முதல் சிஎம்பி லேன் விகேஎம் ஸ்டோர் வரையிலான சாலையோர வடக்கு - தெற்கு குடியிருப்பு பகுதி இரு புறங்களிலும் அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதி ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் 800 மீட்டர் நீளத்தில் குழாய்கள் அமைத்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் பணிகளை அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டு கவுன்சிலர் முகம்மது இப்ராகிம் இன்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஒப்பந்ததாரர் சுல்தான் அருகில் இருந்தார்.

இதுகுறித்து கவுன்சிலர் முகம்மது இப்ராகிம் நம்மிடம் கூறுகையில்; 
அதிரை பேரூராட்சியின் 21 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சிஎம்பி லேன் பகுதியில் முறையான கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்படாததால். இப்பகுதி குடியிருப்புகளில் வெளியேறும் கழிவு நீர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சிஎம்பி வாய்க்காலில் தேங்கி விடுகிறது. இதனால் துர் நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வந்தது.

இதையடுத்து அதிரை பேரூராட்சி பொதுநிதி ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் 800 மீட்டர் நீளத்தில் குழாய்கள் அமைத்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதன் பணிகள் சில வாரங்களில் நிறைவுபெரும். இதனால் இப்பகுதியின் சுமார் 100 குடியிருப்புவாசிகள் பயன் பெறுவார்' என்றார்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.