அதிரை நியூஸ்:
சார்ஜா, ஆகஸ்ட் 28
அமீரகத்தில் பொதுவாகவே அலுவலகம் செல்லும் காலை நேரங்கள் நெரிசல் மிகுந்தவை ஒட்டுனர்களின் பொறுமையை சோதிப்பவை. அதிலும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டால் நத்தை வேகம் நிச்சயம். இதற்கு அமீரகத்தின் எந்தப் பகுதியும் விதிவிலக்கல்ல.
அலுவலகம் செல்லும் நேரமும் பள்ளிக்கூடம் செல்லும் நேரமும் ஒன்றாக இருப்பதால் போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை களைய ஷார்ஜா போக்குவரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, பள்ளிக்கூடங்கள் திறக்கும் நேரங்களில் ஷார்ஜாவில் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை அறிந்து களையும் நோக்கில் ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் கண்காணித்து இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள 60 சிறப்பு ரோந்துக் காவல் வாகனங்கள் மூலம் நிலைமையை உடனுக்குடன் சரி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
5 போக்குவரத்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள ஷார்ஜாவில் அதிக நெரிசல் காணப்படும் இன்டஸ்ட்ரியல் ஏரியாக்கள் போன்ற பகுதிகளுக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்க அதிக முக்கியத்துவம் தரப்படவுள்ளன.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
சார்ஜா, ஆகஸ்ட் 28
அமீரகத்தில் பொதுவாகவே அலுவலகம் செல்லும் காலை நேரங்கள் நெரிசல் மிகுந்தவை ஒட்டுனர்களின் பொறுமையை சோதிப்பவை. அதிலும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டால் நத்தை வேகம் நிச்சயம். இதற்கு அமீரகத்தின் எந்தப் பகுதியும் விதிவிலக்கல்ல.
அலுவலகம் செல்லும் நேரமும் பள்ளிக்கூடம் செல்லும் நேரமும் ஒன்றாக இருப்பதால் போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை களைய ஷார்ஜா போக்குவரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, பள்ளிக்கூடங்கள் திறக்கும் நேரங்களில் ஷார்ஜாவில் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை அறிந்து களையும் நோக்கில் ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் கண்காணித்து இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள 60 சிறப்பு ரோந்துக் காவல் வாகனங்கள் மூலம் நிலைமையை உடனுக்குடன் சரி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
5 போக்குவரத்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள ஷார்ஜாவில் அதிக நெரிசல் காணப்படும் இன்டஸ்ட்ரியல் ஏரியாக்கள் போன்ற பகுதிகளுக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்க அதிக முக்கியத்துவம் தரப்படவுள்ளன.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.