.

Pages

Saturday, August 20, 2016

ரயில்வே உயர் அதிகாரியை சந்திப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து ! ( வீடியோ )

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வரும் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகளை தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை பொறியாளர் காளிமுத்து வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி நிர்வாக பொறியியாளர் பி. செல்வம், உதவி பொறியாளார் எட்வின் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வை மேற்கொள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த அதிகாரிகளிடம் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணி தொடர்பாக கோரிக்கை வைப்பதற்காக பட்டுக்கோட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் விவேகானந்தம், லாசர், வேணுகோபால், ஏ.ஆர் வீராசுவாமி, முத்துப்பேட்டை சமூக ஆர்வலர்கள் கேஎஸ்எச் சுல்தான் இப்ராஹீம் ( சூனா ஈனா ), எஸ்.எஸ் பர்கத் அலி ஆகியோர் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் தயாராக இருந்தனர்.

உயர் அதிகாரிகளை சந்திப்பதற்கு முன்பாக சமூக ஆர்வலர்களிடம் அதிரை நியூஸ் சார்பில் கருத்து கேட்டோம். இதோ அவர்களின் பதில் காணொளி வடிவில்....

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.