தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வரும் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகளை தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை துணை பொறியாளர் சாம்சங் விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடர்பாக தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை துணை பொறியாளர் சாம்சங் விஜயகுமார் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகளை இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கட்டுமானப் பிரிவு உதவி நிர்வாக பொறியாளர்கள் பி. செல்வம், கணபதி, உதவி பொறியாளர் எட்வின் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் விவேகானந்தம், லாசர், அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர்கள் ஹனீபா, கே.எம்.ஏ ஜமால் முஹம்மது, சேக்கனா நிஜாம், மணிச்சுடர் சாகுல் ஹமீது, முஹம்மது தமீம், செல்வம், அபூபக்கர், அன்வர், அன்சாரி உள்ளிட்டோர் அதிகாரிகளை சந்தித்து பணிகளை விரைந்து முடித்து தர கோரிக்கை விடுத்தனர். பின்னர்
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கிராவல் மற்றும் மணல் கலவை நிரப்பும் பணியை பார்வையிட்டனர்.
திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப்பணியில், பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை வரை உள்ள 63 சிறுபாலங்களில் 40 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 5 பெரிய பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2017 மார்ச் 17-க்குள் காரைக்குடி, பட்டுக்கோட்டை பணிகள் முடிவடையும். பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரையிலான பணிகள் 2018 மார்ச்சில் முடிவடையும் என கூறப்படுகிறது.
நம்ம ஊர் சட்டமன்ற உறுப்பினர் நாடாளு மன்ற உறுப்பினர்கள் எல்லாம் இப்போ இங்கே வரமாட்டர்களா? தேர்தல் சமயத்தில்தான் தலைகாட்டுவார்களா?
ReplyDelete