.

Pages

Thursday, November 16, 2017

இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ~ பட்டுக்கோட்டை அரசு மருத்துவர்கள் சாதனை (படங்கள்)

பட்டுக்கோட்டை நவ.16
கால் இடறி விழுந்து இடுப்பு எலும்பு முறிந்த பெண்ணிற்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பாவாஜிக்கோட்டையை சேர்ந்தவர் லெட்சுமி (வயது 52). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், தனது வீட்டில் நடந்து செல்கையில், கால் இடறி கீழே விழுந்தார். இதில் இடுப்பு பகுதியில் பலத்த அடிபட்டு மயக்கமானார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எக்ஸ்ரே பரிசோதனையில், இடுப்பு மூட்டு எலும்பில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் எழுந்து நடமாட முடியாத நிலையில் அவதிப்பட்டு வந்த லெட்சுமியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் கொண்டு வந்து சேர்த்தனர்.

லெட்சுமியை பரிசோதித்த எலும்பு முறிவு மருத்துவர்கள் அவருக்கு மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது.

இதையடுத்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சிவசுப்பிரமணிய ஜெயசேகர் ஆலோசனையின்படி, தலைமை மருத்துவர் டாக்டர் ராணி அசோகன் அறிவுரைப்படி எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் சிவா, டாக்டர் நியூட்டன், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் கபிலன், தலைமை செவிலியர் விஜயலட்சுமி ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் வியாழன் அன்று காலை 10;30 மணி தொடங்கி 12;30 க்குள்
சிக்கலான இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

தமிழக முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில், அரசு மருத்துவமனையில் இடுப்பு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையை செய்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் செய்துமுடிக்க ரூ 2 இலட்சம் முதல் 3 இலட்சம் வரை செலவாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தஞ்சை
மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சிவசுப்பிரமணிய ஜெயசேகர் நேரில் வந்து அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த டாக்டர்கள் சிவா, நியூட்டன், கபிலன் ஆகியோர் அடங்கிய குழுவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்பொழுது தஞ்சை மாவட்ட தொற்றாநோய் பிரிவு மாவட்ட  மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எட்வின், தலைமை மருத்துவர் டாக்டர் ராணி அசோகன், டாக்டர் ராமசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.