.

Pages

Wednesday, November 29, 2017

துபையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) நடத்தும் போட்டிக்கான தங்க நாணயப் பரிசுகள் அறிவிப்பு!

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை, டிசம்பர்-2, 2017 ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) அமீரக கிளை சார்பில் துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் (Mushrif Park) நடைபெற இருக்கும் ஒன்று கூடல்  (Get together) நிகழ்வில் அமீரகம்வாழ் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற இருப்பதை அறிவித்திருந்தோம். அவற்றில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த தங்கக்காசு (Gold Coins) பரிசுகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கபட உள்ளன.

அவற்றின் விபரம் வருமாறு:
முதல் பரிசு: Gold Coin, ஒரு பவுன் (ஒருவருக்கு)
இரண்டாம் பரிசு : Gold Coin, முக்கால் பவுன் (ஒருவருக்கு)
மூன்றாம் பரிசு : Gold Coin, அரை பவுன் (ஒருவருக்கு).
ஆறுதல் பரிசு : Gold Coin, கால் பவுன் (ஒருவருக்கு)

இவைகள் தவிர நவம்பர் 30 மற்றும் டிசம்பர்-1 துபாய் அல் மனார் செண்டரில் நடைபெறும் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான விடை சொல்லும் ஒருவருக்கு கால் பவுன் தங்கக்காசு(Gold Coin) சிறப்புப் பரிசாக வழங்கப்படும்.

ஆகவே, சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லாவாசிகள் காலம் தாழ்த்தாமல் காலை 9-மணிக்குள் நிகழ்ச்சி நடைபெறும் முஷ்ரிஃப் பூங்காவிற்க்கு (Mushrif Park) வருகை தந்து நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற ஒத்துழைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு:
1) வாகன வசதி இல்லாத நமது சங்க மஹல்லா பேச்சிலர்களுக்கு (Bachelors) மட்டும் துபாய் தேரா-வெஸ்ட் ஹோட்டல் அருகிலிருந்து வாகன வசதி செய்யத் திட்டமி்ட்டுள்ளதால் நாளைக்குள் (30-11-2017 வியாழன் இரவு 8:00 மணிக்குள்) முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்படும் என்பதால் கிளை நிர்வாகிகளிடம் அதை உறுதி செய்துகொள்ளவும்.

2) அமீரகத்தில் விசிட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும், நமது ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்காக வெளிநாடு மற்றும் தாயகத்திலிருந்து  வந்திருப்பவர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேவையுள்ளோர் துபாய் கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

இவண்,
ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) அமீரக கிளை

1 comment:

  1. வாழ்த்துக்கள்:
    சாக்கு ஓட்டப் பந்தயத்திற்க்கு அரிசி சாக்கை விட சனல் சாக்கு மேல்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.