அதிராம்பட்டினம், மே.01
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினம் பகுதியில் கரையூர் தெரு, காந்தி நகர் மற்றும் ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய மீனவ கிராமங்களின் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களின் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் வைத்து கோரிக்கையின் அடிப்படையில், முதல்கட்டமாக, அதிராம்பட்டினம் கரையூர் தெரு மீனவ குடும்பங்களுக்கு தலா 10 கிலோ வீதம் அரிசி இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. மீனவ பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அரிசியை வங்கிச்சென்றனர். இதைத்தொடர்ந்து, காந்தி நகர் மற்றும் ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய பகுதிகளின் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதில், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சா.அருள் பிரகாசம், மீன்வளத் துறை ஆய்வாளர் கங்கை ஈஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் முகமது அசாருதீன், ஆனந்த ஜோதி, ஆறுமுகம், கெளரி சங்கர், கிராம நிர்வாக உதவியாளர் பத்மநாபன், அதிராம்பட்டினம் மீனவர் கூட்டறவு சங்கத் தலைவர் நாகராஜ், கரையூர்தெரு கிராம நிர்வாகத் தலைவர் அய்யாவு, துணைத்தலைவர் வீரையன், பொருளாளர் அய்யப்பன் மற்றும் பஞ்சாயத்தார்கள் கலந்துகொண்டனர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினம் பகுதியில் கரையூர் தெரு, காந்தி நகர் மற்றும் ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய மீனவ கிராமங்களின் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களின் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் வைத்து கோரிக்கையின் அடிப்படையில், முதல்கட்டமாக, அதிராம்பட்டினம் கரையூர் தெரு மீனவ குடும்பங்களுக்கு தலா 10 கிலோ வீதம் அரிசி இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. மீனவ பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அரிசியை வங்கிச்சென்றனர். இதைத்தொடர்ந்து, காந்தி நகர் மற்றும் ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய பகுதிகளின் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதில், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சா.அருள் பிரகாசம், மீன்வளத் துறை ஆய்வாளர் கங்கை ஈஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் முகமது அசாருதீன், ஆனந்த ஜோதி, ஆறுமுகம், கெளரி சங்கர், கிராம நிர்வாக உதவியாளர் பத்மநாபன், அதிராம்பட்டினம் மீனவர் கூட்டறவு சங்கத் தலைவர் நாகராஜ், கரையூர்தெரு கிராம நிர்வாகத் தலைவர் அய்யாவு, துணைத்தலைவர் வீரையன், பொருளாளர் அய்யப்பன் மற்றும் பஞ்சாயத்தார்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.