அதிரை நியூஸ்: ஜூலை 09
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாத 24946 நபர்களிடமிருந்து ரூபாய் 25.14 லட்சம் இதுவரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய நோய்த்தொற்றாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா நோயைத் தடுப்பதற்கு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதை கண்காணிக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பறக்கும் படைகளைச் சேர்ந்த அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வரும் நபர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
அதன்படி, தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாத காரணத்திற்காக 3014 நபர்களிடமிருந்து 3,03,600 ரூபாயும், கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாத காரணத்திற்காக 2573 நபர்களிடமிருந்து 2,57,300 ரூபாயும், பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2444 நபர்களிடமிருந்து 2,59,200 ரூபாயும், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 22 பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 7458 நபர்களிடமிருந்து 7,08,250 ரூபாயும், 589 ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 8417 நபர்களிடமிருந்து 8,41,700 ரூபாயும், பறக்கும் படைகளின் மூலம் 1040 நபர்களிடமிருந்து 1,43,700 ரூபாயும் என மொத்தமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத காரணத்திற்காக 24,946 நபர்களிடமிருந்து ரூபாய் 25.14 லட்சம் இதுவரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், வணிக நிறுவனங்களில் கிருமிநாசினி மற்றும் கைகழுவும் அமைப்பு ஏற்படுத்துதல் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாத 24946 நபர்களிடமிருந்து ரூபாய் 25.14 லட்சம் இதுவரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய நோய்த்தொற்றாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா நோயைத் தடுப்பதற்கு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதை கண்காணிக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பறக்கும் படைகளைச் சேர்ந்த அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வரும் நபர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
அதன்படி, தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாத காரணத்திற்காக 3014 நபர்களிடமிருந்து 3,03,600 ரூபாயும், கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாத காரணத்திற்காக 2573 நபர்களிடமிருந்து 2,57,300 ரூபாயும், பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2444 நபர்களிடமிருந்து 2,59,200 ரூபாயும், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 22 பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 7458 நபர்களிடமிருந்து 7,08,250 ரூபாயும், 589 ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 8417 நபர்களிடமிருந்து 8,41,700 ரூபாயும், பறக்கும் படைகளின் மூலம் 1040 நபர்களிடமிருந்து 1,43,700 ரூபாயும் என மொத்தமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத காரணத்திற்காக 24,946 நபர்களிடமிருந்து ரூபாய் 25.14 லட்சம் இதுவரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், வணிக நிறுவனங்களில் கிருமிநாசினி மற்றும் கைகழுவும் அமைப்பு ஏற்படுத்துதல் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.