.

Pages

Thursday, July 9, 2020

தஞ்சை மாவட்ட ஊரகப்பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு: துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்!

அதிரை நியூஸ்: ஜூலை 09
ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்திட அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான குடிநீர் மற்றும் சுகாதாரக்குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 589 ஊராட்சிகளில் உள்ள 2260 குக்கிராமங்களில் உள்ள அனைத்து குடியிருப்பு வீடுகளுக்கும், பொதுமக்கள் பயன்படுத்தும் மருத்துவமனை, பள்ளிக்கூடம், அங்கன்வாடி போன்ற அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களுக்கும், ஊராட்சி பகுதியில் உள்ள கால்நடைகளின் பயன்பாட்டிற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு 100% அளித்திட மத்திய மாநில நிதி ஒதுக்கீட்டின் கீழும் பொதுமக்கள் பங்களிப்புடனும் ஜல் ஜீவன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

ஜல் ஜுவன் திட்டத்தில் கிராம அளவில் செயல்படுத்திட அந்தந்த கிராம ஊராட்சி மன்றங்களின் மு்லம் கிராம வளர்ச்சிக்குழு – கிராம அளவிலான குடிநீர் சுகாதார குழு (Village Water Sanitation Committee) ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் கருத்துக்களை ஏற்று கிராம செயல் திட்ட வரைவினை(Village Action Plan) தயாரித்து ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் ஒப்புதலுக்கு அளித்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21 ம் நிதியாண்டிற்கு ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்திட முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 182 கிராம ஊராட்சிகளில். 645 குக்கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நீர் நிதிநிலை அறிக்கையினை (Village Action Plan) தயாரித்திட ஊரக வளர்ச்சி துறை. கால்நடை பராமரிப்புத்துறை. தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரியம். மீன்வளத்துறை. பொதுப்பணித்துறை. வேளாண்மைத்துறை. தோட்டக்கலை உள்ளிட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான குடிநீர் மற்றும் சுகாதாரக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

09-07-2020 அன்று தஞ்சாவூர், திருவையாறு, பூதலுர், ஒரத்தநாடு, திருவோணம். அம்மாபேட்டை மற்றும் பேராவூரணி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த மண்டல அலவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு கிராம செயல் திட்டம் (Village Action Plan)  தயாரித்தல் மற்றும் மதிப்பீடு தயாரித்தலுக்கான ஒரு நாள் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையேற்று நடத்தினார்.

இப்பயிற்சியில் கிராம அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கீழ்க்கண்டவாறு எடுத்துரைத்தார். முதல் நிகழ்வான களப்பணியின் போது ஊராட்சி பொதுமக்களிடம் கலந்துரையாடல் நடைபெற வேண்டும் எனவும், தொடர்ந்து கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து குளங்கள், ஏரிகள், பாசன வாய்க்கால்கள், ஆறுகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளையும், பண்ணைக்குட்டைகள். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் அருகில் அமைக்கப்பட்டுள்ள உறிஞ்சு குழிகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், கழிவு நீர் உறிஞ்சு குழிகள் உள்ளிட்ட அனைத்து வகையான நிலத்தடிநீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் ஒவ்வொரு தெருக்களில் உள்ள வீட்டு குடிநீர் இணைப்புகளில் வழங்கப்படும் நீரின் அளவு குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் நேரடியாக சென்று பார்வையிட வேண்டும் எனவும், பொறுப்பான அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள், வழிகாட்டுதல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

மேலும், பங்கேற்பு கிராமிய மதிப்பீட்டு கருவிகளான (Participatory Rural Appraisal) உள்ளு்ர் பொதுமக்கள் மு்லம் அக்கிராமத்தின் கிராம வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு ஜல் ஜுவன் திட்டம் செயல்படுத்திட அக்கிராமத்தில் உள்ள தெருக்களின் எண்ணிக்கை, வீடுகளின் எண்ணிக்கை, மொத்த மக்கள் தொகை. கால்நடைகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் எண்ணிக்கை, தனிநபர் இல்ல வீட்டு குடிநீர் இணைப்புகள் போன்றவற்றை கருத்தில் கொள்ளவும், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தினை எடுத்துரைக்கும் வகையில், சமூக வரைபடத்தில் மேற்கண்ட விபரங்களுடன் துல்லியமாக குறிப்பிடவும், அடுத்துவரும் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பாற்றாக்குறை ஏதும் இல்லாத வகையில் தேவையான வள ஆதாரங்களை பெருக்கிடவுமான கிராம செயல்திட்ட வரைவினை உருவாக்கிட (Village Action Plan)  வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

நிலத்தடி நீரினை சேமிப்பதன் முக்கியத்துவத்தையும், பெறப்படும் மழைநீரானது வழிந்தோடி வீணாகாமல் எவ்வாறு சேகரிக்கப்படவேண்டும் எனவும், ஒரு சதுரமீட்டரில் எவ்வளவு கனமீட்டர் நீர் சேகரமாகிறது என்ற கணக்கீடுகளையும் தெளிவாக பயிற்சியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எடுத்துரைத்தார்.

இப்பயிற்சியில் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) இரா. முருகேசன் வரவேற்புரை ஆற்றியதைத் தொடர்ந்து திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆ.பழனி திட்ட செயலாக்க முறையினையும், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) டி.இராமசாமி வரைபடம் (மற்றும்) மதிப்பீடு தயரிக்கும் முறையினை எடுத்துரைத்தார்கள்.

நாளை 10-07-2020 அன்று கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள். பாபநாசம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்களுக்கு இப்பயிற்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.