தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம், கோவிலூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்ட செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் இன்று (02.07.2020) விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜல்ஜீவன் எனப்படும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மத்திய அரசால் அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் 159 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அடுத்த நான்கு வருடங்களுக்குள் தஞ்சாவூர் மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். தரமான குடிநீர், தேவையான அளவு குடிநீர், அனைத்து நேரங்களிலும் குடிநீர் வழங்குவதே ஜல்ஜீவன் திட்டத்தின் இலக்காகும். கிராமத்திலுள்ள நீராதாரங்களை கண்டறிந்து அவற்றை சரிசெய்து நீர் வளத்தை பெருக்குவதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கிட முடியும். தடையின்றி தண்ணீர் பெறுவதற்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 6 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் உள்ளன. 589 ஊராட்சிகளில், 2260 குக்கிராமங்கள் உள்ளன. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 159 ஊராட்சியை தேர்ந்தெடுத்துள்ளாம். வரும் 2024 ஆண்டுக்குள் மீதமுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் குடிநீர் வழங்க உள்ளோம்.
அதற்கு தேவையான ஆழ்குழாய் போர் மூலம் தண்ணீர் எடுப்பதற்குää நிலத்தடி நீரை பெருக்கவும், குளம், ஏரி, மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்து சேமிக்க வேண்டும்.மழையே இல்லாவிட்டாலும், தண்ணீர் கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தின் மூலம் அமைக்கப்படும். இந்த திட்டத்தை கிராம சபா கூட்டம் மூலம், தண்ணீரை சேமிக்கும் வகையில் மேல்நிலைநீர்த்தேக்கத்தொட்டிக்கு கொண்டு சென்று, அதிலிருந்து வீடுகளுக்கு கொண்டு செல்வது, எப்படி பயன்படுத்துவது பற்றி முடிவு செய்து கொள்ளவேண்டும். ஊராட்சியிலுள்ளவர்கள் நிலத்தடி நீர் மட்டும் பெருக்குவதற்கு உறுதி செய்ய வேண்டும். அதில் தங்களை ஈடுபடுத்திகொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் 100 சதவீதம் அனைத்து வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப்படும்.
இது தொடர்பாக குளம், ஏரி, வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து, வெளியேற்றம், தோப்புகள் அதற்கு வரும் தண்ணீர் பாதைகள் குறித்து வரைபடம் வரைந்து, ஆலோசனை செய்யப்படும். தண்ணீரை சேமிக்கவும்ää நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் கிராம மக்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் தான் இத்திட்டங்கள் செயல்படுத்த முடியும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் தமிழ்ச்செல்வம், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின், மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவகுமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ரமேஷ், ஒன்றிய குழு தலைவர் பார்வதிசிவசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கோவிலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள நீர்நிலைகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் நீர்நிலைகளுக்குக்கான வரத்து வாய்க்கால்களில் சுமார் 5 கிமீ தூரம் நடந்தே சென்று தலைப்பு பகுதிவரை பார்வையிட்டு, வரத்து வாய்க்கால் முறையாக தூர்வாரப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, கோவிலூர் ஊராட்சிக்குட்பட்ட அம்பலக்கார தெரு, மேலத்தெரு, ஆதிதிராவிடர் தெரு,ä அரசினர் ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி மற்றும் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் தண்ணீர் முறையாக வருகிறதா என நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஒரு குடும்பத்திற்கு தேவையான நீரின் அளவு, தற்போது பயன்படுத்தப்படும் தண்ணீர் அளவு ஆகியவை குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஜல் ஜீவன் திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஏன் நிறை வேற்றக்கூடாது ? " ஜல் ஜீவன் " திட்டமெல்லாம் சாத்தியமா , ஆழ்குழாய் கிணறு சாத்தியமா இப்படியே ஆழ் குழாயே அமைத்தால் எதிர் காலத்தில் டெல்டா கிராமங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறிதான் ! குறிப்பாக சொல்லப்போனால் , டெல்டா மாவட்டங்கள் பாலை வனமாகும் சூழ் நிலை ஏற்படலாம் எதிர் காலத்தில் ! எத்தனை அடி ஆழ்குழாய் அமைத்தாலும் பூமி வரண்டு போகும் சூழ் நிலை ( ஆபத்து ) தான் ஏற்படும் !
ReplyDeleteஇந்த திட்டம் நமதூருக்கு வந்து விட்டதா?
ReplyDelete