அதிராம்பட்டினம், ஜூலை 07
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதிராம்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா பாதுகாப்பு நிதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி, 4 மணி நேரம் வேலையும், முழு கூலி ரூ. 256 வழங்க வேண்டும், தமிழக அரசின் ஆணைப்படி அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா ரூ.1000 அவர்களின் வீட்டிற்கு சென்று வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் அஸ்ரப் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்டத் தலைவர் பஹாத் முகமது முன்னிலை வகித்தார். இதில், அவ்வைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.எம்.எப் ஜெஹபர் சாதிக், பொருளாளர் என்.ஜமால் முகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவில், கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் சரவணனிடம் வழங்கினர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதிராம்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா பாதுகாப்பு நிதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி, 4 மணி நேரம் வேலையும், முழு கூலி ரூ. 256 வழங்க வேண்டும், தமிழக அரசின் ஆணைப்படி அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா ரூ.1000 அவர்களின் வீட்டிற்கு சென்று வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் அஸ்ரப் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்டத் தலைவர் பஹாத் முகமது முன்னிலை வகித்தார். இதில், அவ்வைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.எம்.எப் ஜெஹபர் சாதிக், பொருளாளர் என்.ஜமால் முகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவில், கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் சரவணனிடம் வழங்கினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.