.

Pages

Wednesday, July 8, 2020

தலைமைக் காவலருக்கு கரோனா: பட்டுக்கோட்டை காவல் நிலையம் மூடல்!

பட்டுக்கோட்டை, ஜூலை 08:
தலைமைக் காவலர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை காவல் நிலையம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் மன்னார்குடியைச் சேர்ந்த 44 வயதுள்ள தலைமைக் காவலர், அவருடைய 2 வயது மகள் இருவருக்கும் கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானதைத் தொடர்ந்து, இருவரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

தலைமைக் காவலருக்கு நோய்த் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தினர் காவல் நிலையம் முழுவதும் செவ்வாய்க்கிழமை கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் காவல் நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து, நாடிமுத்து நகரிலுள்ள திருமண மண்டபத்துக்கு காவல் நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.