.

Pages

Wednesday, April 1, 2015

அதிரையில் வழக்கறிஞர் அப்துல் முனாப், பேராசிரியர் செய்யது அஹமது கபீர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விவேகானந்தன் ஆகியோருக்கு சாதனையாளர் விருது !

முத்தமிழ் அறிவியல் மன்ற பொதுச்செயலாளர் காந்தி லெனின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு துறைகளை சார்ந்த பல்வேறு சேவையாளர்கள் விருது வழங்க தேர்தெடுக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து முத்தமிழ் அறிவியல் மன்றம் சார்பில் அதிரை லாவண்யா திருமண மகாலில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 6 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் இராஜேந்திரன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் தமிழ்துறை பேராசிரியர் கா. செய்யது அஹமது கபீர் அவர்களின் பொதுப்பணி மற்றும் சமூக சேவையை பாராட்டி மனிதநேய காவலர் விருதும், அதிரையின் சமூக ஆர்வலரும், பிரபல வழக்கறிஞருமாகிய அ. அப்துல் முனாப் அவர்களுக்கு நீதியின் காவலர் விருதும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ. விவேகானந்தன் அவர்களுக்கு தூய்மையின் காவலர் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை முத்தமிழ் அறிவியல் மன்ற அதிரை பொறுப்பாளர் அல் ஷனா மழலையர் பள்ளி இயக்குனர் எம்.ஐ நெய்னா முஹம்மது செய்து இருந்தார். இந்நிகழ்ச்சியில் முத்தமிழ் அறிவியல் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

8 comments:

  1. Sereththa mukaththukku
    sonthakkarar kabersar
    vaalththukkal

    ReplyDelete
  2. Munaf anralea
    amathe.
    antha amaithekku
    sonthakkarar valakkaregkar

    ReplyDelete
  3. this is very nice, this is very good, this is very smooth, this is very fine, this is very ok, this is very wonderful, this is not bad,

    ReplyDelete
  4. முத்தமிழ் மன்றம் முகம்தேடித் தந்தநல்லோர்
    வித்தகர் தம்துறையில் மின்னுகிறார் - அத்தனைப்
    பேரிலும் நற்சிறப்பின் பிம்பம் மணக்கிறதே
    ஊரிலும் பேர்புகழ் உண்டு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.