சமையல் கியாஸ் சிலிண்டர்களை மத்திய அரசு மானிய விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தது.
மானியவிலை சிலிண்டர்களை வழங்கும் போது பல்வேறு முறைகேடுகள் நடப்பதை தடுக்கவும், வாடிக்கையாளர்களுக்கு மானியம் நேரடியாக கிடைக்கவும், மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்தது. இதன்படி கியாஸ் சிலிண்டர் இணைப்பு உள்ளவர்கள் தங்கள் வங்கி கணக்கு, ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றின் விவரங்களை கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் நிறுவனங்களில் கொடுக்க வேண்டும்.
இந்த விவரங்களை கியாஸ் நிறுவனமும், வங்கியும் பதிவு செய்த பிறகு வாடிக்கையாளர் சந்தை விலை கொடுத்து சமையல் கியாஸ் சிலிண்டரை வாங்க வேண்டும். அந்த சிலிண்டருக்கான மானியம் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும்.
இதனால் முறைகேடாக கூடுதல் சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மானிய சிலிண்டர் கிடைக்காது.
தமிழ்நாட்டில் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 51 லட்சம். அதில் 1 கோடியே 25 லட்சம் பேர் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இது மொத்த வாடிக்கையாளர்களில் 86 சதவீதம்.
ஆரம்பத்தில் ஆதார் அட்டை இருந்தால் தான் நேரடி மானியம் பெற முடியும் என்று கூறப்பட்டது. அதனால் ஆதார் அட்டை பெறாதவர்கள் மானியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, வங்கி கணக்கு விவரத்தை கொடுத்தாலே மானியம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சேர விதிக்கப்பட்டிருந்த கெடு நேற்றுடன் முடிந்து விட்டது.
ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்களை கொடுக்காதவர்களுக்கு நேற்று வரை மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் இணைந்தவர்களுக்கு சந்தை விலையில் கியாஸ் சிலிண்டர்கள் கொடுக்கப்பட்டது. மானிய தொகை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
மற்ற வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் சந்தை விலையான ரூ. 605–க்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இப்போது, ஆதார் அட்டை இல்லாவர்களும் வங்கி கணக்கு இருந்தால் அந்த விவரங்களை வரும் ஜூன் மாதம் வரை கியாஸ் டீலர்களிடம் கொடுத்து வங்கி மூலம் நேரடி மானியம் பெறலாம். இதற்கான கெடு ஜூன் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்துக்கு பிறகு இந்த திட்டத்தில் சேர முடியாது. எனவே ஜூலை மாதம் வரை இந்த திட்டத்தில் சேராதவர்கள் அதன் பிறகு பெட்ரோலிய நிறுவனங்கள் நிர்ணயிக்கும் சந்தை விலையில் தான் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வாங்க முடியும். மானியம் கிடைக்காது. இந்த தகவலை, பெட்ரோலிய நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி:மாலை மலர்
மானியவிலை சிலிண்டர்களை வழங்கும் போது பல்வேறு முறைகேடுகள் நடப்பதை தடுக்கவும், வாடிக்கையாளர்களுக்கு மானியம் நேரடியாக கிடைக்கவும், மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்தது. இதன்படி கியாஸ் சிலிண்டர் இணைப்பு உள்ளவர்கள் தங்கள் வங்கி கணக்கு, ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றின் விவரங்களை கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் நிறுவனங்களில் கொடுக்க வேண்டும்.
இந்த விவரங்களை கியாஸ் நிறுவனமும், வங்கியும் பதிவு செய்த பிறகு வாடிக்கையாளர் சந்தை விலை கொடுத்து சமையல் கியாஸ் சிலிண்டரை வாங்க வேண்டும். அந்த சிலிண்டருக்கான மானியம் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும்.
இதனால் முறைகேடாக கூடுதல் சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மானிய சிலிண்டர் கிடைக்காது.
தமிழ்நாட்டில் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 51 லட்சம். அதில் 1 கோடியே 25 லட்சம் பேர் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இது மொத்த வாடிக்கையாளர்களில் 86 சதவீதம்.
ஆரம்பத்தில் ஆதார் அட்டை இருந்தால் தான் நேரடி மானியம் பெற முடியும் என்று கூறப்பட்டது. அதனால் ஆதார் அட்டை பெறாதவர்கள் மானியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, வங்கி கணக்கு விவரத்தை கொடுத்தாலே மானியம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சேர விதிக்கப்பட்டிருந்த கெடு நேற்றுடன் முடிந்து விட்டது.
ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்களை கொடுக்காதவர்களுக்கு நேற்று வரை மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் இணைந்தவர்களுக்கு சந்தை விலையில் கியாஸ் சிலிண்டர்கள் கொடுக்கப்பட்டது. மானிய தொகை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
மற்ற வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் சந்தை விலையான ரூ. 605–க்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இப்போது, ஆதார் அட்டை இல்லாவர்களும் வங்கி கணக்கு இருந்தால் அந்த விவரங்களை வரும் ஜூன் மாதம் வரை கியாஸ் டீலர்களிடம் கொடுத்து வங்கி மூலம் நேரடி மானியம் பெறலாம். இதற்கான கெடு ஜூன் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்துக்கு பிறகு இந்த திட்டத்தில் சேர முடியாது. எனவே ஜூலை மாதம் வரை இந்த திட்டத்தில் சேராதவர்கள் அதன் பிறகு பெட்ரோலிய நிறுவனங்கள் நிர்ணயிக்கும் சந்தை விலையில் தான் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வாங்க முடியும். மானியம் கிடைக்காது. இந்த தகவலை, பெட்ரோலிய நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி:மாலை மலர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.