.

Pages

Wednesday, April 1, 2015

அதிரையில் வட மாநிலத்தவர்களை கண்காணிப்பது அவசியமா ?

சில தினங்களுக்கு முன் “தமிழ் நாட்டில் – வட மாநில சகோதரர்களா ? அம்மாடியோவ்!? என்ற தலைப்பில் ஒரு சிறிய கட்டுரையை பார்த்தோம். (http://www.adirainews.net/2015/03/blog-post_526.html) அதனைத் தொடர்ந்து இந்தக் கட்டுரையும் பாருங்கள்.

நமது தமிழ் பூமி என்றைக்குமே அமைதியான பூமி, தமிழ் மக்கள் விரும்புவதும் அதைதான். அயல் தேசங்களில் தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவர்களுக்கு ஒரு தனித்துவம் வாய்ந்த மரியாதை உண்டு, அரபு தேசங்களில் மதராசி என்றால் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் என்று அர்த்தம், அந்த அரபு தேசங்களில் மதராசிக்கு என்றைக்குமே ஒரு மகத்துவம் உண்டு, இதை அரபு தேசம் சென்றவர்களுக்கு நன்கு தெரியும், (அன் த மதராசி, ஜனூப் அல் ஹிந்த், மூக் கதீர், கொய்ஸ்) மேலும் சிங்கப்பூரில் நமது தாய் மொழியாகிய தமிழை ஆட்சி மொழியாக வைத்திருப்பதில் நமக்கு எவ்வளவு பெருமை.

தொலைகாட்சி வருவதற்கு முன், உலக நாடுகளில் மக்கள் வானொலியின் உதவியோடு நிகழ்ச்சிகளை கேட்டு வந்தனர், அந்த மாதிரியான நாட்களில் உலகமெங்கும் பல இடங்களில் நமது தாய் மொழியாகிய தமிழ் மொழியில் நிகழ்சிகளை ஒலிபரப்பி வந்ததை மறக்கமுடியாது. லண்டன் பி.பி.சி. வாய்ஸ் ஆப் அமெரிக்கா, ரேடியோ மோஸ்கோ(ரஷ்யா), ரேடியோ பீகிங்(சைனா), ரேடியோ பாகிஸ்தான், ரேடியோ வெரிதாஸ்(பிலிப்பைன்ஸ்), ரேடியோ மலேசியா, ரேடியோ சிங்கப்பூர், ரேடியோ மாலி, ரேடியோ வாடிகன் சிட்டி(இத்தாலி), ரேடியோ சவுத் ஆப்பிரிக்கா, இலங்கை வானொலி ஆசிய சேவை. போன்ற வானொலி நிலையங்கள் தமிழுக்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி நிகழ்சிகளை ஒலிபரப்பி வந்தார்கள். இன்றும் இது நடந்து வருகின்றது, எனினும் இதை எத்தனை பேர்கள் செவிமடுத்து வருகின்றனர் என்பது தெரியவில்லை.

மேலும், தினமும் மாலை 6.45 மணியிலிருந்து 7.45 மணிவரை  பம்பாய் வானொலி விவிதபாரதியில் “தப்-ஆர்-அப்என்ற நிகழ்ச்சியை ஒலிபரப்பி அதில் தமிழ் மொழியையும் இணைத்துக் கொண்டதை எத்தனை பேர் நமதூரில் அறிவார்கள்?  

உலக அரங்கில் தமிழ் நாட்டிற்கே நற்பெயர் என்றால் அது மிகையாகாது. மேலும் தமிழர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்ற நல்ல பெயரும் உலக நாடுகள் மத்தியில் உண்டு, அதற்காக மற்ற மொழி பேசுபவர்கள் எல்லோரும் தவறு செய்யக் கூடியவர்கள் என்று நான் சொல்ல வரவில்லை.

மேலும் தமிழன் ஒரு அப்பாவி, தனக்கென்று ஏதும் வைத்துக் கொள்ளமாட்டான், எல்லோருக்கும் கொடுப்பதை கொடுத்து விட்டு பின் தனக்கென்று வைத்துக் கொள்வான்.  

இன்றைய தமிழகம் பல இடங்களில் பல விதமான வன்மங்களை சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. இதற்கெல்லாம் என்ன காரணம்.      


இன்று வட மாநிலத்தவர்கள் பிழைக்க வந்த தமிழகத்தில் கொள்ளையிடுதல், பாலியல் வன்முறையில் ஈடுபடுதல், வழிப்பாடு ஸ்தலத்தில் கொள்ளையில் ஈடுபடுதல் போன்ற காரியங்களில் ஈடுபட துவங்கிவிட்டார்கள் என்பதை ஏனைய செய்திகள் பல ஊடகங்களில் மூலம் வந்து கொண்டு இருப்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தத்தம் மாநிலங்களுக்கு தப்பி ஓடி விட்டால் அவர்களை பிடிப்பது மிக சிரமமாக உள்ளது. குற்றவாளிகள் குறித்து எந்த தகவல்களும் கிடைப்பது கடினமாக உள்ளது. மேலும் அதே மாநிலத்தை சேர்ந்த நல்லவர்கள் தமிழ் நாட்டில் இருந்தாலும் தப்பி ஓடியவர்களை பிடிப்பதற்கு எந்தவொரு ஒத்துழைப்பும் தருவதில்லை என்பது வேதனையான விஷயம்.

உதாரணத்திற்கு வடமாநிலத்தவர் செய்த குற்றச் செயல்கள் சிலவற்றை பார்ப்போம். நகைக்கடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ஏழுலட்சம் மதிப்புள்ள வைர நெக்லசை திருடிக்கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் தப்ப முயன்ற ஜார்ர்கெண்ட் மாநிலத்தவனை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவன் தப்ப முயன்ற இரண்டு சக்கர வாகனமும் திருடப்பட்டதே. தல்லாகுளம் பகுதியில் ஒரு பைக் ஷோரூமில் டெமோ காட்ட வைத்திருந்த ஒரு டுவீலரை ஓட்டி பார்ப்பதாக கூறி கடைக்காரரின் கண்ணில் மண்ணை தூவி வண்டியை எடுத்து கொண்டு தலைமறைவாகி இருக்கிறான்.

இதே போல சென்னையில் தங்க நகைகள் தயாரிக்கின்ற பட்டறையில் வட மாநில தொழிலாளர்கள், சக தொழிலாளர்களுக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து கிட்டத்தட்ட ஒரு கிலோ அளவுடைய தங்கத்தை எடுத்து கொண்டு ஓடி இருக்கிறார்கள்.

கரூர் அருகே வேலைக்கு வந்த இடத்தில், இரண்டு வட மாநிலத்தவர்கள் மிருகங்களை புணர்ந்து மிருகங்களுக்கு ரத்தம் காயம் ஏற்படுத்தி உள்ளனர். வாயில்லாத ஜீவன்களை கொடுமைபடுத்திய அந்த வடமாநிலத்தவர்களை கிராமத்து மக்கள் மரத்தில் கட்டி வைத்தனர். இங்கே சொன்ன சம்பவங்கள் போல அன்றாடம் நிறைய குற்றச்செயல்கள் நடக்கிறது.


இன்றைக்கு வட மாநிலத்தவர்கள் பெருமளவு அனைத்து தொழிலையுமே ஆக்ரமித்து லட்சக்கணக்கானவர்கள் தமிழகத்தில் உள்ளனர். பெருமளவு வெளிமாநிலத்தவருக்கு வாழ்வு கொடுத்துள்ள தமிழகத்தை நன்றியுடன் பார்க்க தவறுவது ஏனோ?

தமிழகத்தில் ஒரு பகுதியான நமதூராகிய அதிரை வந்தவர்களை வாழ வைக்கும் என்று நான் சின்னஞ்சிறுவனாக இருக்கும்போதே பலபேர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். காரணம் அதிரைக்கு பிழைப்பு தேடி வந்தவர்கள் யாரும் திரும்பிப் போனதில்லை, தம் தாய் மண்ணை மறந்து அதிரையிலேயே நிலைத்து இருப்பதை இன்றளவும் காண முடிகிறது. அதே அதிரை இன்றும் பல பேர்களை வாழ வைத்துக் கொண்டுதான் இருக்கின்றது. அதாவது வந்தவர்கள் வாழ்க, மற்றவர்கள் வருக என்ற மனம் நிறைந்த நிலைப்பாட்டோடு இந்த அதிரை இன்றளவும் விளங்கிக் கொண்டு இருக்கின்றது.

அன்று அதிரையில் தமிழ்கூறும் நல்லுங்களாகிய தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களால் நிறைந்து காணப்பட்டது. தமிழர்களே எல்லா வேலையிலும் ஈடுபடுத்தப்பட்டனர் மேலும் தம் வேலைகளை திறம்பட செய்தார்கள், அதிரை மக்களோடு நன்றாக கலந்தார்கள், அதிரையும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நன் மக்களோடு உருண்டோடிக் கொண்டிருந்தது.

இன்றைய அதிரை எப்படி இருக்கின்றது?    
குற்றச் செயல்கள் நமதூரையும் விட்டு வைக்க வில்லை. அதிரையில் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு குற்றம் நடந்த வண்ணம் இருக்கின்றது, இதற்கு எல்லாம் என்ன காரணம் என்று விளாவிப்பார்த்தால் தமிழர்கள் அல்லாத இனம் தெரியாதவர்களால்தான் உருவாகிறது என்று எல்லா மக்களின் குற்றச்சாற்றாக இருக்கின்றது.

நமதூருக்கு யாரும் வேலைக்கு வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. இந்தியர்கள் அனைவரும் இந்தியாவில் உள்ள எந்த மூலையிலும் சென்று வேலை செய்யலாம். ஆனால் அந்தந்த ஊர்களுக்கு புதிசு புதிசாக வரும் நபர்களுக்கு வேலை கொடுக்கும் முன் அவர்களைப்பற்றி நன்கு ஆராய்வது வேலை கொடுப்பவர்களின் கடமை.

வெளி மாநிலத்தவர்களை வேலையில் அமர்த்தும் முன், அவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை கொடுக்க வேண்டியது வேலை கொடுப்பவரின் கடமை.

என் வீட்டுக்கு அருகாமையில் இனம் தெரியாத ஒரு புது முகம் கடந்து போகுது என்றால், அந்த புது முகத்தை கூப்பிட்டு விசாரிப்பது என்னுடைய கடமை, சந்தேகம் உண்டாகும்படி இருந்தால் உடனே நான் அதிரை காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். இதுதான் முறை.

பொதுவாக எல்லா மக்களும் விழிப்புணர்வோடு இருந்து ஊரோடு ஒத்துழைப்பில் இணைந்திருத்தல் அவசியம்.

ஒவ்வொரு பள்ளிக் கூடத்திலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிப் பாடங்களோடு விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட கருத்தாக்கங்களையும் ஆசிரியப் பெருமக்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

வீடுகளில் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். என்றும் அமைதியை காக்க எல்லோரும் பாடு படுவோம்.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.

6 comments:

  1. watch those peeople very closely,prevention is better than cure

    ReplyDelete
  2. நாலு அல்லது ஐந்து வருடத்திற்கு முன் நம் ஊரிலே பல நகைக்கடைகளுக்கு தொழில் உதவியாக வட நாட்டவன் ஒருவன் (சேட் என அழைப்பார்கள்),நகை உருக்கிக் கொடுப்பது, பழைய நகை விற்றுக்கொடுப்பது போன்ற மற்றும் நம்பிக்கை நிறைந்தவனாக நடித்து பின் எல்லோரிடமும் பணம், நகைகளை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டான். இதுவரை அவனிக் கண்டு பிடித்ததாகத் தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்ற ஆளு இரண்டாம் பள்ளிக் கூடம் எதிரில் உள்ள கட்டிடத்தில் அதாவது ஒண்ணா நம்பர் பள்ளிக் கூடத்திற்கு அருகில் உள்ள கட்டிடத்தில் உள் பக்கம் உள்ள வீட்டில் தங்கி நகை வேலைகளை செய்து வந்தான், இறுதியில் அபேஸ்.

      அவனைப்பற்றி அதே கட்டிடத்தில் எலெக்ட்ரிக் சாமான் விற்கும் சேட்டுக்கும் தெரியுமாம், தெரிந்தும் அவனை இன்றுவரை காட்டிக் கொடுக்கவில்லை. இதுதாங்க மார்வாடிங்க இடத்தில் பல இயக்கங்கள் இருக்குது, இருந்தாலும் ஒற்றுமையோடு இருப்பானுக.

      நம் ஆளுக வாயில் மண்ணு.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அதிராம் பட்டினம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி அரங்கேறும் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை கண்டறியும் வகையில், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களின் முழு விபரங்களை சேகரிக்கும் பணியெய் SP அல்லது DSP அவர்கள் உத்தரவிடவேண்டும்.

    தங்கியுள்ள வெளிமாநிலத்தைவர்களின் பெயர், விபரங்கள், அவர்கள் பணியாற்றும் இடம், முகவரி, அதற்கான அடையாள அட்டை, கைரேகை, போட்டோ போன்ற விபரங்களை சேகரிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்க வேண்டும் .

    ஒருசில திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை மட்டுமே, போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர். பெரும்பாலான திருட்டு, வழிப்பறி, மோசடி உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில், போலீஸார் களமிறங்க வேண்டும்.

    வெளிமாநிலத்தவர்கள் கடுமையான உழைப்பாளிகள் மற்றும் நேர்மையானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதில் மறுப்பில்லை. இங்கே எந்த தொழிலும் ஆரம்பிக்க முறையாக ஆவணம் பெறப்பட்டு அதனை அதிகாரிகளால் சரிப்பார்க்கப் படுகிறதா?

    ReplyDelete
  5. சிறந்த ஒரு விழிப்புணர்வு படைப்பு .
    வடமாநிலத்தவர் என்றல்ல ஊரில் தெருக்களில் தென்படும் புதிய முகங்களை அடிக்கடி பார்த்தோமேயானால் அவர்களை அவசியம் கண்காணிப்பது நல்லதாக தெரிகிறது. ஏனென்றால் யாரையும் நம்பமுடியாத காலமாக இருந்து வருகிறது. அப்படி எத்தனையோ சம்பவங்கள் நமதூரில் நடந்துள்ளது. இப்போது குழந்தை கடத்தல் ஆங்காங்கே நடந்து வருவதையும் நாம் பல செய்திகளில் கேள்விப் படுகிறோம் . எதற்கும் பொதுமக்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருந்தால் அசம்பாவிதத்திளிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.