.

Pages

Saturday, April 4, 2015

மதுக்கூர் பகுதியில் பயனாளிகளுக்கு மிக்சி - கிரைண்டர் - மின்விசிறி: அமைச்சர் வைத்திலிங்கம் வழங்கினார் !

மதுக்கூர் வடக்கு மற்றும் களத்தூர் மேற்கு கிராமங்களில்  2 ஆயிரத்து 374 குடும்பங்களுக்கு  விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் மாண்புமிகு வீட்டு வசதி, நகர்ப்பு வளர்ச்சித் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் வழங்கினார்.   விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார்.

விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் உள்ள 1 கோடியே 95 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இது வரை 80 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது.  ஒரே நேரத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லா பொருட்களை உற்பத்தி செய்து வழங்குவது சிரமமான காரியம். அதனால் தான் 5 கட்டங்களாக வழங்கப்பட்டு வருகிறது.  தஞ்சாவ10ர் மாவட்டத்தில் 4 கட்டங்களுக்கு 4 இலட்சத்து 73 ஆயிரம் குடும்பங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இது வரை 3 இலட்சத்து 26 ஆயிரத்து 437 குடும்பங்களுக்கு இன்று வரை விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 இலட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்.  இன்று மதுக்கூர் வடக்கு கிராமத்தில் ஆயிரத்து 695 குடும்பங்களுக்கும், களத்தூர் மேற்கு கிராமத்தில் 679 குடும்பங்களுக்கும்ää விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர், விலையில்லா வெள்ளாடுகள், விலையில்லா கறவை பசுக்கள், திருமண உதவித் தொகை ரூ.50 ஆயிரம், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 16 வகையான உபகரணங்கள், உதவித்தொகை, ஊக்கத்தொகை, விலையில்லா மிதிவண்டிகள், காலணிகள், சீருடைகள், கர்ப்பிணி பெண்களுக்கு 12 ஆயிரம் உதவித் தொகை என ஏழை எளிய மக்களின் சிரமங்களை போக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினாலும், ஏழை மக்களின் வறுமை போக்க ஒரே ஆயுதம் கல்வி ஒன்று தான்.  எனவே தான் பல்வேறு துறைகள் இருந்தாலும், கல்வி மட்டும் 26 ஆயிரம் கோடி மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.  அனைவரும் கல்வி கற்று வேலை வாய்ப்பு பெற்று குடும்பத்தின் சிரமங்களை போக்கி 2023 ஆண்டு தமிழகம் கல்வியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உயருவதற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் அரும்பாடுபட்டு வருகிறார்கள்.  அவர்கள் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் பெண்கள் அனைவரும் தங்களின் குழந்தைகள் கட்டாயம் படிக்க வைக்க வேண்டும். ஆண்களை விட பெண்கள் அனைத்து துறைகளிலும் திறமையானவர்களாக சிறந்து விளங்குகிறார்கள்.  அதனால் தான் அனைத்து திட்டங்களும் பெண்களை மையமாக வைத்து செயல்படுத்தி வருகிறார்கள். திட்டங்களை பெறுகின்ற பொது மக்கள் அவற்றினை பலனை பெற்று  மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவாக இருக்க கேட்டுக் கொள்கிறேன்.

விழாவில் மதுக்கூர் பால்வளத் தலைவர் திரு.துரை.செந்தில், பேராவ10ரணி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.சாந்தி அசோக்குமார், பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திரு.எஸ்.ஆர்.ஜவஹர்பாபு, கூட்டுறவு சங்க தலைவர் திரு.சுப்ரமணியன், வருவாய் கோட்டாட்சியர் திரு.அரங்கநாதன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் பொ.சேதுராமன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் திருமதி.கீதா ராணி மேகலாதன் (மதுக்கூர் வடக்கு), திரு.முருகன் (களத்தூர் மேற்கு), திரு.கார்த்திகேயன், கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.பழனிவேல், திரு.துரைமாணிக்கம் மற்றும் ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.

1 comment:

  1. யார் வீதிக்கு வந்து போராடினார்கள்? இந்த இலவசங்கள் வேண்டும் என்று. இது வோட்டுக்காக கொடுக்கப்படும் மறைமுக லஞ்சம். வரி கட்டாதவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். இப்படி வரிபணத்தை வீணடிப்பவர்களை தண்டிக்க சட்டம் இல்லையா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.