.

Pages

Thursday, April 9, 2015

அதிரை நியூஸின் நன்றி அறிவிப்பு !

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தினமும் பள்ளிக்கு சென்று வர பிரதான வழியாக ஈசிஆர் சாலை அமைந்துள்ளது. பள்ளி மாணவர்கள் மதிய இடைவேளையின் போதும், வகுப்புகள் முடிந்த பிறகு வீடுகளுக்கு செல்லவும் இந்த சாலையை கடந்து செல்வார்கள். இதனால் இந்த பகுதி எந்நேரமும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அவ்வபோது திடீர் விபத்துகளும் ஏற்படுவதுண்டு. இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால் தமுமுக ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த [ 23-02-2015 ] அன்று அதிரை நியூஸில் 'பள்ளி அருகே வேகத்தடை: அதிரை ஆர்வலரின் ஆதங்கம் !' என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. அதில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நடந்துள்ளன என்றும், இந்த நான்கு வழி இணைப்பு சாலையில் வேகத்தடை ஏற்படுத்தி, 'விபத்து பகுதி' என எச்சரிக்கை பலகையையும் வைத்தால் ஓரளவு விபத்தை குறைக்கலாம் என்று தெரிவித்திருந்தோம். இவற்றை வாசித்த நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் இந்த பகுதியில் வாகன வேகத்தடுப்பு அமைப்பது அதிகளவில் நடைபெறும் விபத்துகளை தவிர்க்க உதவும் என கூறி மாவட்ட ஆட்சியர், தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை கடந்த [ 26-02-2015 ] அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தார்.

இந்நிலையில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் உத்தரவின் பேரில், அதிரை காவல்துறை ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் ஏற்பாட்டில் சம்பந்தப்பட்ட பகுதியில் கடந்த அன்று [ 06-04-2015 ] காலை முதல் புதிதாக வாகன வேகத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட துறையினருக்கு சரியான நேரத்தில் கோரிக்கையை எடுத்துச்சென்ற சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்களுக்கும், கோரிக்கை ஏற்று விரைவில் நிறைவேற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கும் அதிரை நியூஸ் சார்பில் நன்றியையும், வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிரை நியூஸ் குழு

4 comments:

  1. மாணவர்களின் நலன் கருதி வேகத்தடை அமைக்க எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். நெடுஞ்சாலை துறை செய்ய வேண்டிய வேலை நமது தொகுதி வேட்பாளர் செய்துள்ளார் -நன்றி. இந்த வேகத்தடை வேகத்தை அவ்வளவாக குறைக்காது மேலும் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்து பைபர் வேகத்தடை நான்கு பக்கமும் அமைக்க வேண்டும். இதன் மூலம் எல்லா விபத்துக்களும் தடுக்கப் படும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete
  4. மாணவர்களின் நலன் கருதி வேகத்தடை அமைக்க எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். நெடுஞ்சாலை துறை செய்ய வேண்டிய வேலை நமது தொகுதி வேட்பாளர் செய்துள்ளார் -நன்றி. இந்த வேகத்தடை வேகத்தை அவ்வளவாக குறைக்காது மேலும் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்து பைபர் வேகத்தடை நான்கு பக்கமும் அமைக்க வேண்டும். இதன் மூலம் எல்லா விபத்துக்களும் தடுக்கப் படும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.