.

Pages

Thursday, April 2, 2015

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் !

பட்டுக்கோட்டை நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் அப்துல் சமது, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஏனாதி பாலசுபிரமணியன், கா. அண்ணாதுரை, சீனி நகர முன்னாள் செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜன், மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளார் பி.என்.ஆர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விடுபட்ட உறுப்பினர்களை சேர்த்தல், இளைஞர் அணிக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்தல், திமுக ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளர் மனோகரன் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக திமுகவினர் பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஏராளமான திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 
 

1 comment:

  1. வந்த நல்ல காலத்தை தவறுதலாக பயன்படுத்திவிட்டு, இப்போ வருத்தப்பட்டு என்ன பயன்,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.