.

Pages

Sunday, April 5, 2015

டேய் மச்சான், வட மாநில ஆள் மாதிரி தெரியுதுடா!?


மாடு 1: டேய் மச்சான் என்னடா பார்க்குறா அங்கே,

மாடு 2: மச்சான் பேசாமே சும்மா இருடா.

ன்னடா சொல்றே,

ங்கே பாருடா, நம்ம ரெண்டு பேரையும் அவரு போட்டோ புடிக்கிறாருடா!.

போட்டோவா! நம்ம ரெண்டு பேரையுமா!?

ச்சான், நீ ஒரு பே-மக்காத்துடா, உனக்கு ஒன்னுமே தெரியாது, மற்ற மாடுகள் பின்னாடி சும்மா சுற்றித் திரிந்தா மட்டும் போதுமா, அங்கும் இங்கும் பார்த்து பார்த்து சுத்தனும்டா.

ரி மச்சான் இப்போ என்னடா சொல்ல வர்றே,

ச்சான் கொஞ்சம் அப்படியே அசையாமே நில்லுடா. நம்மளே போட்டோ எடுத்து இன்டர்நெட்டுலே போடப்போறாருண்டு நான் நினைக்கிறேன்.

டேய் மச்சான், இன்டெர்நெட்டுலே போட்டு நம்மளை விலை பேச போறாரா? நம் நாட்டுலே நம்மளை கொல்லக் கூடாதுன்னு சட்டம் போட்டாச்சேடா, அப்பறம் என்னடா இதெல்லாம்?.

வன் ஒருத்தன், சும்மா பொறுமையா இருடா, என்னாதான்னு பார்ப்போம்.

ல்லேடா மச்சான், இவரைப் பார்த்தா வடமாநில ஆள் மாதிரி தெரியுதுடா.

ப்படீடா சொல்றா?

ந்த வூரு ஆளா இருந்தா வெள்ளைக் கைலி கட்டி இருப்பாரு, ஆனா இவரு ஒரு மாதிரியான நிறத்தில் சட்டையும் கருப்பு நிறத்திலே பேண்டுல்லோ போட்டு இருக்காரு, எனக்கு பயமா இருக்குதடா.

பேண்ட்டு போட்டா வடமாநில ஆளுன்னு அர்த்தமா, அவரு முகத்தை பாருடா, அசல் பால் வடியும் அதிரையர் டா.

ரி மச்சான், நீ சொல்றது எல்லா ஓகேதான், இன்டர்நெட்டுலே நம்மளே போட்டா! நம்ம மனசுக்குள்ளே இருக்கிற செய்தியை அவர்கிட்டே கொடுத்தா இன்டர்நெட்டுலே போடுவாராடா?

ன்ன செய்திடா அது, இப்படி கொடுடா, நான் கொடுக்கிறேன்.

ச்சான், எனக்கு பயமா இருக்குதுடா, இந்த செய்தியை படிச்சிட்டு வேணும்ன்னே நம் மீது வண்டியை ஓட்டுனாலும் ஓட்டுவாங்கடா.

வாய் பேச முடியாத ஜீவன்கள் கொடுத்த செய்தி இதோ உங்கள் பார்வைக்கு.

சிந்திக்கத் தெரிந்த ஆறறிவு படைத்த மனிதர்களே, நீங்க நல்லா இருக்கணும், சிந்திக்க தெரியாத அப்பாவி மிருக இனம் பேசுகின்றோம் கேளுங்கள்.

சமீப காலமாக நடக்கும் விபத்துகளுக்கு எங்கள் மேல் பழியைப் போட்டு கதையை மூடிவிடுகின்றீர்களே இது எந்த வகையில் நியாயம் என்று எங்களுக்கு தெரியவில்லை, தவறுகளை எல்லாம் உங்கள் மீது வைத்துக்கொண்டு எங்கள் மீது பழி போடுவது உங்களுக்கு வழக்கமாக போய்விட்டது, இது முற்றிலும் சரியில்லை.

முதலில் உங்களுக்கு வாகன ஓட்டும் வயது கிடையாது, வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் கிடையாது, நீங்கள் வாகன விதி சட்டத்தை கடைபிடிப்பது கிடையாது. நீங்கள் யாருடைய கண்டிப்புக்கும் அடங்குவது கிடையாது, ஆக மொத்தத்தில் நீங்க எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டு திரிகின்றீர்கள்.

பல பஸ் உரிமையாளர்கள் ஆம்னி பஸ்களை வைத்துக் கொண்டு நெடுந்தூர பயண சேவையை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றார்கள். இது ஒருவகையில் பொதுமக்களுக்கு பலனைக் கொடுத்தாலும், பல வகைகளில் மறக்க முடியாத சங்கடத்தை கொடுத்து பொதுமக்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்குகிறது. இதை வாகன உரிமையாளர்கள் உற்று நோக்க வேண்டும், பொது மக்களுக்கு நேர்த்தியான பயணத்தை கொடுப்பது உங்களின் கடமை.

பொதுவான கண்ணோட்டத்தில் பார்த்தால், வாகனங்களுக்கும் வாகனத்தில் பயணிப்போற்களுக்கும் முறையான இன்ஸ்யூரன்ஸ் இருக்குதா அல்லது இல்லையா என்ற கேள்வி எழுகின்றது. ஆம்னி பஸ்களில் எமர்ஜென்சி கதவுகள் கிடையாது. அதுபோல் எமர்ஜென்சி ஜன்னல்கள் கிடையாது. விசாலமான இருக்கைகள் கிடையாது. திறமையான ஓட்டுனர்கள் கிடையாது, ஓட்டுனர்களுக்கு சரியான ஒய்வு கிடையாது. இப்படியாக பொது மக்களில் பலர் குற்றம் சுமத்துகின்றனர். 

அவசரமாக போகணும் என்று வேகமாக போகும் பஸ்ஸை பல பயணிகள் தேர்ந்தெடுக்கின்றார்கள். வேகமாக ஓட்டனும் என்று பல டிரைவர்கள்  துடியாய் துடிக்கின்றார்கள். எல்லா வண்டிகளையும் முந்திக் கொண்டு போகணும் என்று பல பஸ் உரிமையாளர் தூங்காமல் விழித்துக்கொண்டு செல் போனில் டிரைவரை விரட்டு விரட்டு என்று விரட்டுகின்றார்கள். இப்போ யாருமேலே தவறு இருக்குது?

இறுதியாக டிரைவர் குடித்து இருப்பாரோ என்ற சந்தேகம் வேறு, அப்போ குடித்தவனுக்கும் குடிக்காதவனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு.

அடுத்ததாக, எங்களுடைய உரிமையாளர்களையும் கடுமையாக தண்டிக்கணும், எங்களுக்கு சரியான அடைக்கலம் கொடுத்தால், நாங்களும் பத்திரமாக ஒரு இடத்தில் இருப்போமே, சும்மா வீதி வீதியா அலைவதற்கு எங்களுக்கு என்ன கொழுப்பா இல்லே திமிரா, எங்களது உயிர் போனது மட்டும் இல்லாமல் வசை சொல்லு வேறு.

நாங்க என்ன உங்களிடம் ஏசி, அட்டாச் பாத், மார்பில் போட்ட ரூமையா கேட்கிறோம். நான்கு கம்புகளை ஊன்றி அதன் மேல் கீற்றுகளை போட்ட சின்ன கொட்டகையைத் தானே கேட்கிறோம், எங்களை கொசு, பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள்  கடிச்சாலும் உங்களுக்கு தெரியப்போவதில்லை, அப்படியே தெரிந்தாலும் கண்டுக்கப் போவதில்லை.  

எங்க வாப்பாவுக்கும் சரியா இடம் கிடையாது, அவரைப் போட்டு அடி அடின்னு அடிக்கிறீங்க, எங்க உம்மா கிட்ட பாலை மட்டும் கறந்துக்கிட்டு பொழுதன்னைக்கும் வெளியிலேயே விட்டு விடுகிறீர்களே, ஒருநாளைக்கு உங்களை எல்லோரையும் வீட்டுக்குள் விடாமல் கதவைப் பூட்டி வெளியில் விட்டால் தான் தெரியும், நாங்கள் எவ்வளவு பாடு படுகிறோம் என்று. இனியாவது நியாயமாக நடக்க முயற்சி செய்யுங்கள். ஆமா!?.

புகைப்படம் மற்றும் சிந்தனை:
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.

6 comments:

  1. மாடு உங்களை முட்டாம இருந்தா சரிதான்.

    ReplyDelete
  2. TODAY NEWS மச்சான் கொஞ்சம் அப்படியே அசையாமே நில்லுடா. நம்மளே போட்டோ எடுத்து இன்டர்நெட்டுலே போடப்போறாருண்டு நான் நினைக்கிறேன்

    ReplyDelete
  3. மாடு தன் வரலாறு கூறுதல் 100/90 மார்க் மச்சன் !!!!

    ReplyDelete
  4. குடுத்துவச்ச மாடுங்க. வாயில்லா ஜீவனுக்கு வாயா இருந்து மாட்டுக்கு நல்லா வக்காலத்து வாங்கி இருக்கிறீர்கள் அருமை. ஜமால் காக்காவின் சிந்தனை எப்பவுமே வித்தியாசமாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  5. ஜமால் காக்காவின் சிந்தனை எப்பவுமே வித்தியாசமாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  6. ஜமால் காக்காவின் சிந்தனை எப்பவுமே வித்தியாசமாகத்தான் இருக்கும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.