இந்நிலையில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இதற்கான டெண்டர் விடும் பணியை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. முதற்கட்டமாக பேருந்து நிலைய மைய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள டேக்ஸி வாகனங்களை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில் அதிரைக்கு வருகை தந்த வருவாய் ஆய்வாளர் டேக்ஸி ஸ்டாண்ட் வாகன ஓட்டுனர்களிடம் நேரடி விசாரணையை மேற்கொண்டார். தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது. மேலும் டேக்ஸி வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று இடம் கை காட்டப்படும் என தெரிகிறது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீர்ந்துவிட்டால் இதன்பிறகு கடைகள் ஏலம் விடும் பணிகள் துவங்கும் என தெரிகிறது.
முன்னதாக பேரூராட்சியின் சார்பில் கடைகள் கட்டும் பணி துவங்கியதிலிருந்து கடைகள் அனைத்தும் கட்டி முடிக்கும் வரை ஏராளமான வர்த்தகர்கள் குறிப்பாக பேக்கரி, உணவகம், டீ கடை, பழக்கடை, பலசரக்கு கடை, அடகு கடை ( வட்டிக்கடை ), மதுபானக்கடை, சர்பத் கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு தொழில் புரியும் உள்ளூர் மற்றும் வெளியூர் வாழ் வர்த்தகர்கள் கடைகள் கேட்டு பேரூராட்சி நிர்வாகத்தை அணுகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிரையின் சமூக ஆர்வலர் குலாப்ஜாமூன் அன்சாரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுநல தகவல் கேட்டு கடந்த [ 02-01-2015 ] அன்று மனு அனுப்பி இருந்தார். அதில் பேரூராட்சிக்கு சொந்தமாக பேரூந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகள் எப்போது ஏலம் விடப்படும் என்றும், மேற்படி கடைகள் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி ( ஆட்டோ மூலம் ) அறிவிப்பு செய்யப்படுமா என்று கேட்டு இருந்தார். அதற்கு பேரூராட்சி சார்பில் கடந்த [ 05-01-2015 ] அன்று அளிக்கப்பட்ட தகவலில் 'அரசிதழ், நாளிதழ் விளம்பரம் மாத்திரமே செய்யப்படும்' என்றும் 'ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்காது' என கூறப்பட்டுள்ளது.
ஒலிப்பெருக்கி அறிவிப்பு இல்லை என கூறிவிட்டதால், பெரும்பாலான பொதுமக்களுக்கு கடை ஏலம் விடும் நாள் மற்றும் நிபந்தனைகள் குறித்து விவரங்கள் அறிந்துகொள்வதில் சிரமம் ஏற்படும். ஆகையால் அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் விடும் நாள், இடம் மற்றும் நிபந்தனைகள் குறித்த விவரங்ககளை எளிமையான முறையில் பலரும் அறிந்துடும் வகையில் அனைத்து பகுதிகளிலும் பகிரங்கமாக அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும், கடைகளை ஏலத்தில் எடுக்க எவ்வித அரசியல் குறுக்கீடும் இல்லாதவாறு உரிய முறையில் வெளிப்படையான டெண்டர் விடவும், உள்ளூரை சேர்ந்த படித்த பட்டாதாரி இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், புதிதாக தொழில் தொடங்கும் நபர்களுக்கு கடைகளை வழங்கவும், ஏற்கனவே மற்றொரு இடத்தில் தொழில் நடத்தி வருபவர், மேல் வாடகைக்கு விடும் நபர்கள் ஆகியோரை டெண்டரின் போது புறக்கணிக்கவும், ஒரு நபருக்கு ஒரு கடை என்பதை தீர்மானிக்கவும், மக்கள் அதிகமாகக் கூடும் பகுதியாகிய இங்கு வட்டிக்கடை, மதுக்கடை ஆகியவற்றிற்கு கடைகள் வழங்க வேண்டாம் என பொதுமக்களும், ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.jpg)

ஒலிப்பெருக்கி அறிவிப்பு இல்லை என கூறிவிட்டதால் கடை ஏலம்விடுவதில் அரசியல் குறுக்கீடு கண்டிப்பாக இருக்கும். செல்வந்தர்கள், அரசியல் முக்கிய புள்ளிகள் பினாமி பெயரில் கடை எடுத்து அதை Sublease விட்டு அதிக வருமானத்தை பார்க்கப் போகிறார்கள். ஒரு கடைக்குள் இன்னொருவர் கடை நடத்த அனுமதித்தால் போக்குவரத்து, வணிகவலகத்தின் தோற்றம் முற்றிலும் மாறிவிடும், பொதுமக்கள் முன்னிலையில் ஏலம்விட்டால் ஒவ்வொரு கடையும் எவ்வளவு வாடகைக்கு போகுதுன்னு தெரியும்; மறைமுக ஏலத்தால் ஒவ்வொரு கடையும் 1500, 2500, 3000, 3500 இப்படை விடுவதால் அரசுக்கு தான் நஷ்டம் ஏற்படும். வாடகை நிர்ணயித்தது வெளிப்படையாக இருக்க வேண்டும், எந்த நோக்கத்திற்காக, வணிக வளாகம் கட்டப்பட்டதோ, அது நிறைவேறாமல் போகும் அச்சம் நிலவக் கூடாது. என்னத்தான் நடக்கப் போகுதுன்னு பார்ப்போமே!
ReplyDeleteசமூக செய்தி மக்களுக்களுக்கு தெரியப் படுத்திய சமூக ஆர்வலர் குலாப்ஜாமூன் அன்சாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்,