.

Pages

Saturday, April 4, 2015

காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய கழகத்தின் ஆண்டு விழா !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய கழகத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் தலைமை வகித்தார். பேராசிரியர் முனைவர் எம். சிக்கந்தர் பாஷா, பேராசிரியைகள் திருமதி எம். ஏ தஸ்லீமா, E. பிளோமினா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் குறித்த அறிமுக உரையை ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் ஏ. முகம்மது முகைதீன் வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாண்டிச்சேரி மத்திய பல்கலைகழக பேராசிரியர் முனைவர் மார்க்ஸ் விழா பேருரை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் முன்னதாக முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர் பி. ராம்குமார் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் இலக்கிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

முன்னதாக முதுகலை முதலாம் ஆண்டு மாணவி தாமரைச்செல்வி ஆங்கிலதுறையின் சார்பில் கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட சாதனை பட்டியலை ஆண்டரிக்கையாக தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர் முஹம்மது ஹம்சா தொகுத்து வழங்கினார். கல்லூரியின் ஆங்கிலப்பிரிவை சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவியர் பல்வேறு தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தினார்கள். விழா முடிவில் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி எம். கிருத்திகா நன்றி கூறினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.