தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே செந்தலைப்பட்டினம் பொதுநலச் சங்கம் சார்பில் புதிய அலுவலக திறப்பு விழாவும், ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் எம்.முகமதுஹனீபா தலைமை வகித்தார். ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கௌரவ தலைவர் ஆர்.ஹெச்.எம்.ராவுத்தர் வரவேற்றார். மதுவிலக்கு அமல் பிரிவு மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.சேகர் பொதுநலச் சங்க புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பேராவூரணி வட்டாட்சியர் கோ.இரகுராமன் அனைத்து சமுதாய மக்களும் பலனடையும் வகையில் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரையாற்றினார்.
கடற்படை அலுவலர் பி.என்.சேத்தி, அதிராம்பட்டினம் பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை பி.ஆர்.ஓ. ஜேம்ஸ், காவிரி விவசாயிகள் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் டி.பி.கே.ராஜேந்திரன், காவல்துறை ஆய்வாளர் க.அன்பழகன் ஆகியோர் உரையாற்றினர்.
விழாவில் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அகமது கபீர், ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் மரைக்கா இத்ரீஸ் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
விழாவில் காதர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.உதுமான் முகைதீன், டாக்டர் எம்.ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தலைப்பட்டினம் எம்.முகமது ரபீக், சம்பைப்பட்டினம் தஸ்தகீர், கிராம நிர்வாக அலுவலர் டி.ஜெயதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகள் பி.நாகூர்கனி, எம்.ரஹ்மத்துல்லா, ஏ.ஜகபர்அலி மற்றும் நிர்வாகிகள், இளைஞர் மன்றத்தினர், ஜமாஅத்தார்கள், கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். செயலாளர் எம்.பகுருதீன் நன்றி கூறினார்.
அனைத்து சமுதாய மக்களும் பலனடையும் வகையில் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் படத்தை காணோம் !!???
ReplyDeleteசேவைக்குதானே ஆம்புலன்ஸ் பார்வைக்கு இல்லை போலும்.
ReplyDelete