.

Pages

Wednesday, August 17, 2016

அதிரை பேருந்து நிலையத்தில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 17
சட்டப்பேரவையில் இன்று நடந்த விவாதத்தின் போது ஏற்பட்ட தொடர் அமளியை அடுத்து சபாநாயகர் தனபால், திமுக உறுப்பினர்களுக்கு ஒரு வாரம் சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்தார். மேலும், அவைக் காவலர்கள் மூலம் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு பேரவைக்கு வெளியே வந்தனர்.

இவற்றைக் கண்டித்து திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய இளைஞர் அணி, அதிராம்பட்டினம் பேரூர் இளைஞர் அணி சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே இன்று இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பொன். ரமேஷ் தலைமை வகித்தார். இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். பின்னர் அதிராம்பட்டினம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை அப்புறப்படுத்தினர். இதனால் சில நிமிடங்கள் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

ஆர்ப்பாட்டத்தில் திமுக அதிரை பேரூர் துணை செயலாளர் அன்சர்கான், அதிரை பேரூர் இளைஞர் அணி அமைப்பளார் சாகுல் ஹமீது, துணை அமைப்பாளர் அகிலன், சுரேஷ், ஆனந்த், சத்திய நாராயணன், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் வீரமணி, ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, திமுக வார்டு கவுன்சிலர்கள் முஹம்மது சரீப், செய்யது முஹம்மது உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.