அதிரை நியூஸ்:
சவூதி, ஆகஸ்ட் 16
சவூதியில் வேலையின்றியும், சம்பளமின்றியும் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு ஏற்கனவே மன்னர் சல்மான் அவர்கள் உத்தரவின்படி உதவிகளும், சம்பள பாக்கிகளும் பட்டுவாடா செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், "சவூதி ஓஜர்" என்ற கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த சுமார் 2500 இந்தியத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கிட சுமார் 50 தனியார் நிறுவனங்கள் முன்வந்து அதன் தொடர்பான நேர்முகத் தேர்வுகளும் ரியாத் நகரில் நடந்து வருவதாக ஜெத்தாவிலுள்ள இந்திய கவுன்சுலர் ஜெனரல் முஹமது நூர் ரஹ்மான் ஷேக் அவர்கள் தெரிவித்தார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட இந்தியத் தொழிலாளர்களின் 25 பேர் அடங்கிய முதற்குழு வரும் 18-08-2016 அன்று ஜெத்தா வழியாக புது டில்லி திரும்பவுள்ளனர்.
இந்திய தொழிலாளர்களைப் போல் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களுக்கான உதவிகளையும், பாக்கி சம்பளத்தை பெற்றுத் தருவது போன்ற பணிகளையும் பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரிகள் தலையிட்டு செய்து வருகின்றனர்.
Source: Constructionweek / Msn
தமிழில்: நம்ம ஊரான்
சவூதி, ஆகஸ்ட் 16
சவூதியில் வேலையின்றியும், சம்பளமின்றியும் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு ஏற்கனவே மன்னர் சல்மான் அவர்கள் உத்தரவின்படி உதவிகளும், சம்பள பாக்கிகளும் பட்டுவாடா செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், "சவூதி ஓஜர்" என்ற கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த சுமார் 2500 இந்தியத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கிட சுமார் 50 தனியார் நிறுவனங்கள் முன்வந்து அதன் தொடர்பான நேர்முகத் தேர்வுகளும் ரியாத் நகரில் நடந்து வருவதாக ஜெத்தாவிலுள்ள இந்திய கவுன்சுலர் ஜெனரல் முஹமது நூர் ரஹ்மான் ஷேக் அவர்கள் தெரிவித்தார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட இந்தியத் தொழிலாளர்களின் 25 பேர் அடங்கிய முதற்குழு வரும் 18-08-2016 அன்று ஜெத்தா வழியாக புது டில்லி திரும்பவுள்ளனர்.
இந்திய தொழிலாளர்களைப் போல் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களுக்கான உதவிகளையும், பாக்கி சம்பளத்தை பெற்றுத் தருவது போன்ற பணிகளையும் பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரிகள் தலையிட்டு செய்து வருகின்றனர்.
Source: Constructionweek / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.