அதிரை நியூஸ்: மே 27
அமீரகத்தில் ஜீப்ரா கிராஸிங் (Zebra Crossing) எனப்படும் பாதசாரிகள் சாலைகளை (Pedestrian Passing) கடக்குமிடம் தவிர்த்து பிற இடங்களில் குறுக்கும் நெடுக்குமாக பலரும் கடப்பதால் (Jay Walking) பல சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன. இதற்காக அவ்வாப்போது பல விழிப்புணர்வு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன என்றாலும் இது செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.
இந்நிலையில், ஷார்ஜாவில் 2017 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 'ஜே வாக்கர்ஸ்' (Jaywalkers) எனப்படும் அனுமதியில்லாத இடத்தில் சாலையை குறுக்காக கடப்பவர்கள் 3,943 பேர் பிடிபட்டு தலா 200 திர்ஹம் அபராதம் செலுத்தியுள்ளனர் என்றும் இவர்கள் மீது பொருப்பற்ற முறையில் பிறருக்கு விபத்து மற்றும் காயங்கள் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளல், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளல் போன்ற ஷரத்துக்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றங்களிலும் நிறுத்தப்படுவார்கள் என ஷார்ஜா போலீஸ் அறிவித்துள்ளது.
அதேபோல், ஜீப்ரா கிராஸிங் பகுதியில் பாதசாரிகளுக்கு முன்னுரிமை தந்து வாகனங்களை நிறுத்தாத ஓட்டுனர்கள் மீது 500 திர்ஹம் மற்றும் 6 கரும்புள்ளிகள் அபராதமாக விதிக்கப்படும்.
பாதசாரிகள் நடந்து செல்லும் ஜீப்ரா கிராஸிங் மீது பாதசாரிகளுக்கு இடைஞ்சலாக வாகனங்களை நிறுத்துவோர் மீது 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
பாதசாரிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துவோர் அல்லது பாதசாரிகளின் நடமாட்டத்தின் மீது தடையேற்படுத்துவோர் மீது 200 திர்ஹம் மற்றும் 3 கரும்புள்ளிகள் அபராதமாக விதிக்கவும் அமீரக தேசிய போக்குவரத்து சட்டம் இடமளிக்கின்றது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அமீரகத்தில் ஜீப்ரா கிராஸிங் (Zebra Crossing) எனப்படும் பாதசாரிகள் சாலைகளை (Pedestrian Passing) கடக்குமிடம் தவிர்த்து பிற இடங்களில் குறுக்கும் நெடுக்குமாக பலரும் கடப்பதால் (Jay Walking) பல சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன. இதற்காக அவ்வாப்போது பல விழிப்புணர்வு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன என்றாலும் இது செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.
இந்நிலையில், ஷார்ஜாவில் 2017 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 'ஜே வாக்கர்ஸ்' (Jaywalkers) எனப்படும் அனுமதியில்லாத இடத்தில் சாலையை குறுக்காக கடப்பவர்கள் 3,943 பேர் பிடிபட்டு தலா 200 திர்ஹம் அபராதம் செலுத்தியுள்ளனர் என்றும் இவர்கள் மீது பொருப்பற்ற முறையில் பிறருக்கு விபத்து மற்றும் காயங்கள் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளல், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளல் போன்ற ஷரத்துக்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றங்களிலும் நிறுத்தப்படுவார்கள் என ஷார்ஜா போலீஸ் அறிவித்துள்ளது.
அதேபோல், ஜீப்ரா கிராஸிங் பகுதியில் பாதசாரிகளுக்கு முன்னுரிமை தந்து வாகனங்களை நிறுத்தாத ஓட்டுனர்கள் மீது 500 திர்ஹம் மற்றும் 6 கரும்புள்ளிகள் அபராதமாக விதிக்கப்படும்.
பாதசாரிகள் நடந்து செல்லும் ஜீப்ரா கிராஸிங் மீது பாதசாரிகளுக்கு இடைஞ்சலாக வாகனங்களை நிறுத்துவோர் மீது 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
பாதசாரிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துவோர் அல்லது பாதசாரிகளின் நடமாட்டத்தின் மீது தடையேற்படுத்துவோர் மீது 200 திர்ஹம் மற்றும் 3 கரும்புள்ளிகள் அபராதமாக விதிக்கவும் அமீரக தேசிய போக்குவரத்து சட்டம் இடமளிக்கின்றது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.