.

Pages

Friday, May 19, 2017

SSLC தேர்வில், அதிரையில் 93.59 சதவீதம் பேர் தேர்ச்சி !

அதிராம்பட்டினம், மே 19
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று வெள்ளிக்கிழமை காலை வெளியானது. அதிராம்பட்டினத்தில் உள்ள அரசுப்பள்ளி, அரசு உதவிபெரும் பள்ளிகள், சுயநிதி தனியார் மெட்ரிக். பள்ளி என மொத்தம் 4 பள்ளிகளை சேர்ந்த 549 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதினர். இதில் 507 பேர் தேர்ச்சி பெற்றனர். அதிரை அளவில் மொத்தம் 93.59 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிராம்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மொத்தம் 106 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 106 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 100 சதவிகிதம் பெற்றுள்ளது.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 154 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 149 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 96.75 சதவிகிதம் பெற்றுள்ளது.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 99 பேர்கள் ( ஆண்கள் 65 பேர், பெண்கள் 34 பேர் ) தேர்வு எழுதினார்கள். இதில் 93 பேர் ( ஆண்கள் 61 பேர், பெண்கள் 32 பேர் ) தேர்ச்சி பெற்று, பள்ளி 93.94 சதவீகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 190 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 159 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 83.68 சதவீகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.