.

Pages

Thursday, May 18, 2017

அதிரையில் மீண்டும் பலத்த காற்று வீசுகிறது !

அதிராம்பட்டினம், மே 18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் முதல் பலத்த காற்று வீசியது. இதனால் அதிராம்பட்டினம் கடலோர பகுதிகளில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு செல்லவில்லை.

இந்நிலையில், மீண்டும் இன்று வியாழக்கிழமை மதியம் முதல் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் அலைகள் வழக்கத்தைவீட சீற்றத்துடன் காணப்படுகின்றன. ஆங்காங்கே தென்னை மரங்களின் தோகைகள் சாய்ந்து கீழே விழுந்தன. பலத்த காற்றால் அதிராம்பட்டினம் ஈசிஆரில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள் முறிந்து விழுந்தது.

புழுதி காற்று வீசிவருகிறது. இதனால் சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். ரோட்டில் பொதுமக்கள் நடமாட்டம் வழக்கத்தை வீட குறைந்து காணப்படுகின்றன. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.