அதிரை நியூஸ்: மே 24
துபையில் செயல்படும் ஆம்புலன்ஸூகளின் அடிப்படை செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இவ்வாண்டு இறுதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என துபை ஆம்புலன்ஸ் வாகன சேவை அமைப்பு (Dubai Corporation for Ambulance Services - DCAS) தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டணங்களை வாடிக்கையாளர்கள் தங்களின் இன்ஷூரன்ஸ் கார்டுகள் மூலம் செலுத்தலாம் என்றும் இன்ஷூரன்ஸ் கார்டு இல்லாதவர்களுக்கு மட்டும் மனிதாபிமான அடிப்படையில் சில தவிர்க்க இயலா சமயங்களில் இலவச சேவை தொடரும் எனவும் அறிவித்துள்ளது.
ஆரம்பமாக, அனைத்து துபைவாசிகளும் இந்த கட்டாய கட்டண சேவையின் கீழ் கொண்டு வரப்பட்டு பின்பு சுற்றுலா மற்றும் இதர வருகையாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
துபை ஆம்புலன்ஸ் வாகன சேவை மையத்திடம் பலவகையான நவீன ஆம்புலன்ஸூகள் 177 உள்ளன. இவை துபை முழுவதும் பரந்துள்ள 68 மையங்களிலிருந்து இயக்கப்படுகிறது. சமீபத்தில், மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் 'முஸ்டாங்' (Mustang) வகை அதிநவீன ஆம்புலன்ஸூகள் சேவையில் இணைக்கப்பட்டது. இவை ஒவ்வொன்றும் 1 மில்லியன் திர்ஹம் மதிப்புடையவை.
தமிழில்: நம்ம ஊரான்
Source: Khaleej Times / Msn
துபையில் செயல்படும் ஆம்புலன்ஸூகளின் அடிப்படை செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இவ்வாண்டு இறுதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என துபை ஆம்புலன்ஸ் வாகன சேவை அமைப்பு (Dubai Corporation for Ambulance Services - DCAS) தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டணங்களை வாடிக்கையாளர்கள் தங்களின் இன்ஷூரன்ஸ் கார்டுகள் மூலம் செலுத்தலாம் என்றும் இன்ஷூரன்ஸ் கார்டு இல்லாதவர்களுக்கு மட்டும் மனிதாபிமான அடிப்படையில் சில தவிர்க்க இயலா சமயங்களில் இலவச சேவை தொடரும் எனவும் அறிவித்துள்ளது.
ஆரம்பமாக, அனைத்து துபைவாசிகளும் இந்த கட்டாய கட்டண சேவையின் கீழ் கொண்டு வரப்பட்டு பின்பு சுற்றுலா மற்றும் இதர வருகையாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
துபை ஆம்புலன்ஸ் வாகன சேவை மையத்திடம் பலவகையான நவீன ஆம்புலன்ஸூகள் 177 உள்ளன. இவை துபை முழுவதும் பரந்துள்ள 68 மையங்களிலிருந்து இயக்கப்படுகிறது. சமீபத்தில், மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் 'முஸ்டாங்' (Mustang) வகை அதிநவீன ஆம்புலன்ஸூகள் சேவையில் இணைக்கப்பட்டது. இவை ஒவ்வொன்றும் 1 மில்லியன் திர்ஹம் மதிப்புடையவை.
தமிழில்: நம்ம ஊரான்
Source: Khaleej Times / Msn
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.