அதிரை நியூஸ்: மே 18
எதிர்வரும் புனித ரமலான் மாதத்தில் நோன்பாளிகள் பயனடையும் வகையில் சிறப்பு இஃப்தார் உணவை வழங்க எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் குறிப்பிட்ட சில சர்வதேச சேவைகள், வளைகுடா நாடுகளுக்காக அனைத்து சேவைகள் மற்றும் உம்ராவுக்கு செல்லும் ஜெத்தா, மதீனா விமானச் சேவைகளிலும் அரேபிய உணவுவகைகள் அடங்கிய இஃப்தார் உணவு பாக்கெட்டுகள் வழங்கப்படும். ரமலான் மத்தியில் இந்த உணவுவகைகளின் மெனு மாற்றப்படும்.
அதேபோல், அனைத்து எமிரேட்ஸ் விமான சேவைகளின் போதும் சஹர் நேரம் மற்றும் இஃப்தார் நேரம் குறித்த அறிவிப்புக்களும் விமான கேப்டன் மூலம் அறிவிப்புச் செய்யப்படும். மேலும், விமான பறக்கும் போது அறிந்துகொள்ள வசதியாக புனித ரமலானுடைய சஹர் மற்றும் இஃப்தார் நேரங்கள் பற்றி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸூக்கென உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு கையேடும் விமானத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
எதிர்வரும் புனித ரமலான் மாதத்தில் நோன்பாளிகள் பயனடையும் வகையில் சிறப்பு இஃப்தார் உணவை வழங்க எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் குறிப்பிட்ட சில சர்வதேச சேவைகள், வளைகுடா நாடுகளுக்காக அனைத்து சேவைகள் மற்றும் உம்ராவுக்கு செல்லும் ஜெத்தா, மதீனா விமானச் சேவைகளிலும் அரேபிய உணவுவகைகள் அடங்கிய இஃப்தார் உணவு பாக்கெட்டுகள் வழங்கப்படும். ரமலான் மத்தியில் இந்த உணவுவகைகளின் மெனு மாற்றப்படும்.
அதேபோல், அனைத்து எமிரேட்ஸ் விமான சேவைகளின் போதும் சஹர் நேரம் மற்றும் இஃப்தார் நேரம் குறித்த அறிவிப்புக்களும் விமான கேப்டன் மூலம் அறிவிப்புச் செய்யப்படும். மேலும், விமான பறக்கும் போது அறிந்துகொள்ள வசதியாக புனித ரமலானுடைய சஹர் மற்றும் இஃப்தார் நேரங்கள் பற்றி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸூக்கென உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு கையேடும் விமானத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.