அதிராம்பட்டினம், மே-18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், திருச்சி டாக்டர் கே. சாந்தா மார்பக நோய் அறக்கட்டளை, டாக்டர் ஜி. விசுவநாதன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான மார்பக நோய் கண்டறிதல் சிறப்பு முகாம் வியாழக்கிழமை அதிரை தீன் டயக்னாஸ்டிக் சென்டரில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எம். வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலாளர் ஜி. சந்திரசேகர், பொருளாளர் டி. முஹம்மது நவாஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் மெட்ரோ மாலிக், பல் மருத்துவர் பா. பாரதி ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
முகாமில், மேமோகிராம் வசதி கொண்ட மேமோ பஸ் திருச்சியிலிருந்து கொண்டு வரப்பட்டு, பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி டாக்டர் கே. சாந்தா மார்பக நோய் அறக்கட்டளை, டாக்டர் ஜி. விசுவநாதன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவக்குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கப்பட்டன. மேலும், மார்பக புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் நோய் வருவதற்கு முன் காப்பது குறித்து அறிவுரைகளும் வழங்கப்பட்டன. முகாமில் 50 பெண்கள் பங்கேற்றனர். முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. பயனாளிகளுக்கு இலவச மோர் பானம் வழங்கப்பட்டது.
இம்முகாமில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் தீன் மெடிக்கல்ஸ் சம்சுதீன், முதுகலை ஆசிரியர் அஜ்முதீன், அகமது மன்சூர், மலர் ஜுவல்லரி அப்துல் காதர், முஹம்மது தமீம், உதயகுமார், ஹாஜா பகுருதீன், வைரவன், கண்ணன், ஆறுமுகம், நவாஸ்கான், அப்துல் ஹலீம், சலாஹுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், திருச்சி டாக்டர் கே. சாந்தா மார்பக நோய் அறக்கட்டளை, டாக்டர் ஜி. விசுவநாதன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான மார்பக நோய் கண்டறிதல் சிறப்பு முகாம் வியாழக்கிழமை அதிரை தீன் டயக்னாஸ்டிக் சென்டரில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எம். வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலாளர் ஜி. சந்திரசேகர், பொருளாளர் டி. முஹம்மது நவாஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் மெட்ரோ மாலிக், பல் மருத்துவர் பா. பாரதி ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
முகாமில், மேமோகிராம் வசதி கொண்ட மேமோ பஸ் திருச்சியிலிருந்து கொண்டு வரப்பட்டு, பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி டாக்டர் கே. சாந்தா மார்பக நோய் அறக்கட்டளை, டாக்டர் ஜி. விசுவநாதன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவக்குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கப்பட்டன. மேலும், மார்பக புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் நோய் வருவதற்கு முன் காப்பது குறித்து அறிவுரைகளும் வழங்கப்பட்டன. முகாமில் 50 பெண்கள் பங்கேற்றனர். முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. பயனாளிகளுக்கு இலவச மோர் பானம் வழங்கப்பட்டது.
இம்முகாமில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் தீன் மெடிக்கல்ஸ் சம்சுதீன், முதுகலை ஆசிரியர் அஜ்முதீன், அகமது மன்சூர், மலர் ஜுவல்லரி அப்துல் காதர், முஹம்மது தமீம், உதயகுமார், ஹாஜா பகுருதீன், வைரவன், கண்ணன், ஆறுமுகம், நவாஸ்கான், அப்துல் ஹலீம், சலாஹுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.