அதிராம்பட்டினம் மே-22
அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் ( AFFA ) நடத்தும் 14 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த மே 6 ந் தேதி அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரில் கிராணி மைதானத்தில்
தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை 17 வது நாள் ஆட்டமாக அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் ( AFFA ) அணி, சிவகங்கை ஃபுட்பால் கிளப் அணியும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-0 என்ற கணக்கில் கோல் அடித்து அதிரை AFFA அணியினர் வெற்றிபெற்று எதிர்வரும் 24ந்தேதி நடைபெற உள்ள இறுதி போட்டியில் விளையாடும் தகுதி பெற்றனர்.
இதில் AFFA அணியின் நட்சத்திர வீரர் முபீஸ் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.
ஆட்ட அம்பயர் பொறுப்பை கார்த்திக் ஏற்றார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் அதிரை அஹ்மது ஹாஜா தொகுத்து வழங்கினார். இன்றைய ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.
இன்று ( 22-05-2017 ) திங்கட்கிழமை மாலை கண்டனூர், தஞ்சாவூர் அணிகள் விளையாட உள்ளனர். ஆட்டம் சரியாக 5 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் ( AFFA ) நடத்தும் 14 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த மே 6 ந் தேதி அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரில் கிராணி மைதானத்தில்
தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை 17 வது நாள் ஆட்டமாக அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் ( AFFA ) அணி, சிவகங்கை ஃபுட்பால் கிளப் அணியும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-0 என்ற கணக்கில் கோல் அடித்து அதிரை AFFA அணியினர் வெற்றிபெற்று எதிர்வரும் 24ந்தேதி நடைபெற உள்ள இறுதி போட்டியில் விளையாடும் தகுதி பெற்றனர்.
இதில் AFFA அணியின் நட்சத்திர வீரர் முபீஸ் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.
ஆட்ட அம்பயர் பொறுப்பை கார்த்திக் ஏற்றார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் அதிரை அஹ்மது ஹாஜா தொகுத்து வழங்கினார். இன்றைய ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.
இன்று ( 22-05-2017 ) திங்கட்கிழமை மாலை கண்டனூர், தஞ்சாவூர் அணிகள் விளையாட உள்ளனர். ஆட்டம் சரியாக 5 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.