பட்டுக்கோட்டையில் நடந்த மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டியில் அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் (WCC) அணி இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கிரிக்கெட் கிளப் 2 ஆம் ஆண்டு நடத்தும் மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த மே.9 ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் சென்னை, திருச்சி, காரைக்குடி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உட்பட 32 அணிகள் கலந்துகொண்டு விளையாடியது.
இன்று வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை கிரிக்கெட் கிளப், அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் ஆகிய அணிகள் மோதியது. போட்டி முடிவில், அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றது. நாளை சனிக்கிழமை மாலை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தஞ்சை அணியோடு மோத உள்ளது. இதில் வெற்றி பெரும் அணிக்கு ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பரிசு, கேடயம் வழங்கப்பட உள்ளது.
பட்டுக்கோட்டையில் நடக்கும் போட்டிகள் மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் இல்லை மாவட்ட அளவிலான தொடர் மட்டுமே
ReplyDeleteBhai karaikudi,trichy,chennai ethu yellam oru maavattama?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAppo chennai mattum thaan maanilama. Maanila alavilana pottina tamilaha alavil nadakkum potti. Pala maanilankal kalanthu kondal athu national level potti.
ReplyDelete