.

Pages

Friday, May 26, 2017

அதிரையில் புதுப்பொலிவுடன் மருந்தகம் திறப்பு ( படங்கள் )

அதிராம்பட்டினம், மே 26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் கடந்த 44 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் 'மீரா மெடிக்கல்ஸ்' மருந்தகம் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றது.

இந்நிலையில், இதன் மற்றுமொரு அங்கமாக மீரா மெடிக்கல்ஸ் எதிரில் இரண்டு தளங்களைக் கொண்ட புதிய கட்டிடத்தில் புதுப்பொலிவுடன் 'எஸ்.எஸ் மெடிக்கல்ஸ்' என்ற பெயரில் இன்று வெள்ளிக்கிழமை மாலை முதல் செயல்பட தொடங்கி உள்ளது. திறப்பு நாளான இன்று ஏராளமான வாடிக்கையாளர்கள் மருந்தகத்திற்கு வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து 'எஸ்.எஸ் மெடிக்கல்ஸ்' நிறுவனர் 'செய்யது அஹமது' கூறியது;
'அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்களுக்காக கடந்த 44
ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்ட 'மீரா மெடிக்கல்ஸ்' மருந்தகத்தை வழிநடத்தி வந்தேன். இவற்றை நவீனப் படுத்தும் நோக்கில், எஸ்.எஸ் மெடிக்கல்ஸ்' என்ற புதிய பெயரில் இரண்டு தளங்களைக் கொண்ட புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் புதுப்பொலிவுடன் இன்று  வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி உள்ளோம்.

எங்கள் நிறுவனத்தில் வழமை போல் தரமான நிறுவனங்களின் அனைத்து வகை உயிர் காட்கும் மருந்துகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இலவச டோர் டெலிவரி வசதி உண்டு.

எங்களது மருந்தகச் சேவை தொய்வில்லாமல் தொடர அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்' என்றார்.

மருந்தக தொடர்புக்கு: 04373 242765
 
 
 

1 comment:

  1. நான் சிறுவயதாக இருக்கும்போதே “மீரா மெடிகல்ஸ்” எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பெயர், அந்தப் பெயரை எஸ்.எஸ்.மெடிக்கல்ஸ் என்று மறுஉருவம் செய்து வேறு ஒரு இடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் என்றாலும், பழையனதுக்கு ஒரு மவுசு உண்டு. ஆட்கள், மருந்து, குரல் எல்லாம் பழையனதாக இருந்தாலும், மக்கள் மீண்டும் அழைக்கப்போவது “மீரா மெடிக்கல் என்றுதான்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.