.

Pages

Wednesday, May 31, 2017

கரையூர்தெரு தீ விபத்தில் பாதித்தோருக்கு வீடு கட்டித்தர மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோரிக்கை !

அதிராம்பட்டினம், மே 31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் அடுத்தடுத்து உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியது. இதன் சேத மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.

தகவலறிந்த  மக்கள் அதிகாரம் பட்டுக்கோட்டை வட்டார நிர்வாகிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பாதிப்படைந்த குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் தீ விபத்தில் பாதிப்படைந்த 50 குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக  அரிசி, சேலை, பள்ளி நோட்டு புத்தகங்கள், சிறுவர் சிறுமிகளுக்கு ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்கள்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டலக்குழு உறுப்பினர் மாரிமுத்து கூறுகையில்;
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெரு மீனவர் கிராமத்தில் கடந்த மே 29ந் தேதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 54 குடிசைகள் தீயில் கருகி தரைமட்டமானது. இதில் இலட்சக்கனக்கான பொருட்கள் எரிந்து நாசமானது. நூற்றுக்கணக்கான மக்கள் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு இல்லாத மக்களுக்கு அரசு கொடுக்கும் நிவாரணமோ வெறும் 5 ஆயிரம் ரூபாய். இது வாயிக்கும், வயிற்றுக்கும் கூட போதாது.

அந்த வகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை போர்கால அடிப்படையில் செய்து தரவேண்டும்.  வீட்டை இழந்து தெருவில் நிற்கும் மக்களுக்கு தரமான வீடு கட்டித்தர வேண்டும், மீன்பிடி தொழிலை நம்பி இருக்கும் மீனவ மக்களுக்கு வலைகளை வழங்கி வாழ்வாதாரத்தை உறுதிபடுத்து வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைக்கிறேன்' என்றார்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.