.

Pages

Tuesday, May 30, 2017

அதிரையில் அரசுப் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி பழைய இரும்பு கடைக்குள் புகுந்து விபத்து: ஓட்டுனருக்கு காயம் !

அதிராம்பட்டினம், மே 30
அதிராம்பட்டினத்தில் அரசுப் பேருந்து  - லாரி நேருக்கு நேர் மோதி பழைய இரும்பு கடைக்குள் புகுந்து விபத்து. ஓட்டுனருக்கு காலில் பலத்த காயம்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையிலிருந்து அரசுப் பேருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிராம்பட்டினம் வழியாக திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை நோக்கி சென்றது. பேருந்து அதிரை வண்டிப்பேட்டை ஐயப்பன் கோவில் அருகே வந்த போது, எதிரே வந்த சரக்கு லாரி மீது நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பழைய இரும்புக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் அரசுப் பேருந்து ஓட்டுனர் சந்தனராசுக்கு (56 ) காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயர் சிகிச்சைக்கு தஞ்சாவூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.