அதிரை நியூஸ்: மே 25
ஓமனில் வெயில் காலத்தில் வெப்பநிலை சுமார் 40 முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை நிலவும். மேலும் புனிதமிகு ரமலான் மாதமும் துவங்கவுள்ளதாலும் எதிர்வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய) 3 மாத காலத்திற்கு கட்டாய பகல் நேர இடைவேளையை ஓமன் அரசின் மனித ஆற்றல் துறை அமைச்சகம் (Ministry of Manpower) அறிவித்துள்ளது.
இதன்படி, கட்டிடத் தொழில் உட்பட திறந்தவெளியில் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ள அனைத்து வகை தொழில்களிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் பகல் 12.30 முதல் மாலை 3.30 வரை கட்டாய ஓய்வு தர வேண்டும். மீறும் நிறுவனங்கள் மீது 100 முதல் 500 ஓமன் ரியால் அபராதமும் 1 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
இந்த சட்டத்தை மீறுபவர்களை கண்காணிப்பதற்காக சிறப்பு சோதனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாடு முழுவதும் அதிரடி சோதனைகளை மேற்கொள்வர். கட்டாய பகல் நேர இடைவேளை சட்டத்தை மீறுபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க 80077000 என்ற எண்ணில் அழைத்து புகார் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஓமனில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் கட்டுமானத் தொழில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
ஓமனில் வெயில் காலத்தில் வெப்பநிலை சுமார் 40 முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை நிலவும். மேலும் புனிதமிகு ரமலான் மாதமும் துவங்கவுள்ளதாலும் எதிர்வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய) 3 மாத காலத்திற்கு கட்டாய பகல் நேர இடைவேளையை ஓமன் அரசின் மனித ஆற்றல் துறை அமைச்சகம் (Ministry of Manpower) அறிவித்துள்ளது.
இதன்படி, கட்டிடத் தொழில் உட்பட திறந்தவெளியில் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ள அனைத்து வகை தொழில்களிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் பகல் 12.30 முதல் மாலை 3.30 வரை கட்டாய ஓய்வு தர வேண்டும். மீறும் நிறுவனங்கள் மீது 100 முதல் 500 ஓமன் ரியால் அபராதமும் 1 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
இந்த சட்டத்தை மீறுபவர்களை கண்காணிப்பதற்காக சிறப்பு சோதனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாடு முழுவதும் அதிரடி சோதனைகளை மேற்கொள்வர். கட்டாய பகல் நேர இடைவேளை சட்டத்தை மீறுபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க 80077000 என்ற எண்ணில் அழைத்து புகார் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஓமனில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் கட்டுமானத் தொழில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.